கருமலை எஸ்டேட் பகுதியில் 1935 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா

விழாவில் அப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்களாகிய மருத்துவர்கள், நீதியரசர்கள், வழக்கறிஞர்கள், பொறியாளர்கள், காவல்துறை அதிகாரிகள், வங்கி அதிகாரிகள், போக்குவரத்து துறை பணியாளர்கள், ரயில்வே துறை பணியாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டு தங்களது பள்ளிக்கால நினைவுகளை நினைவு கூர்ந்தனர்.


கோவை: வால்பாறை அருகே 1935 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா நடைபெற்றது. கோவை மாவட்டம் வால்பாறை அருகே கருமலை எஸ்டேட் பகுதியில் 1935 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா நடைபெற்றது.



விழாவில் அப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்களாகிய மருத்துவர்கள், நீதியரசர்கள், வழக்கறிஞர்கள், பொறியாளர்கள், காவல்துறை அதிகாரிகள், வங்கி அதிகாரிகள், போக்குவரத்து துறை பணியாளர்கள், ரயில்வே துறை பணியாளர்கள், ராணுவ அதிகாரிகள், தனியார் மற்றும் அரசுத்துறை ஆசிரியர்கள், பேராசிரியர்கள், தொலைத் தொடர்பு துறை பணியாளர்கள், அஞ்சல் துறை அலுவலர்கள், மத்திய மாநில வரித்துறை அதிகாரிகள், வனத்துறை அதிகாரிகள், தனியார் துறை நிறுவனம் மேலாளர்கள், வணிகர்கள் மற்றும் பல்துறை வல்லுனர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் முன்னாள் ஆசிரியர்களும், முன்னாள் மாணவர்களும், இந்நாள் ஆசிரியர் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டு பழைய நினைவுகளை நினைவுகூர்ந்தனர்.



இவ்விழாவில் கருமலை பள்ளியின் புகை படத்தை அஞ்சல் துறையில் தாபல் தலையாக வெளியிட்டனர். இதை முன்னாள் மாணவர்கள் இந்நாள் மாணவர்களிடம் வழங்கினர்.

விழாவில் முன்னாள் மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள், பேச்சுப்போட்டி, கவிதை போட்டி மற்றும் சிரியவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் முதலானவைகள் நடைபெற்று, ஆசிரியர் மற்றும் முன்னாள் மாணவ மாணவிகளுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. விழா குழு உறுப்பினர்கள் தமிழ்வேந்தன், அன்புசேகர், மாதவன், தெய்வானை, ராஜமார்த்தாண்டன், மகாராஜா, அசோக் குமார், சூசி, ராமதாஸ், பரமசிவம், பிரபு, செந்தில், அன்புராஜ் ஆகியோர்கள் விழாவினை நடத்தினர்.

Newsletter

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...