தாராபுரத்தில் வள்ளுவர் தெருவில் திருவள்ளுவர் சமூகத்தைச் சேர்ந்த இரு பிரிவினர்களுக்கு இடையே மோதல்

எம்ஜிஆர் பிறந்தநாள் விழா மற்றும் பொங்கல் விளையாட்டு போட்டிகளை நடத்துவதில், திருவள்ளுவர் குலச்சங்கம் திருவள்ளுவர் இளைஞர் நற்பணி மன்றதை சேர்ந்த நபர்களுக்கும், வாழும் வள்ளுவர்குலம் இளைஞர் நலச்சங்கத்தை சேர்ந்தவர்களுக்கும் மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பூளவாடி ரோடு, திருவள்ளுவர் தெருவில் வசித்து வரும் வாழும் வள்ளுவர்குலம் இளைஞர் நலச்சங்கத்தை சேர்ந்த ஒரு பிரிவினருக்கும், அதே பகுதியில் வசித்து வரும் திருவள்ளுவர் குலச்சங்கம் திருவள்ளுவர் இளைஞர் நற்பணி மன்றதை சேர்ந்த மற்றொரு பிரிவினருக்கும், இடையே பொங்கல் விழா மற்றும் திருவள்ளுவர் பிறந்த நாள் விழா கொண்டாடுவதில் கருத்து வேறுபாடு இருந்துள்ளது.



இருவரும் அந்தோனியார் அரசு உதவி பெறும் பள்ளி எதிரே உள்ள பொது வளாகத்தில் பொங்கல் விழா போட்டிகளை இரு பிரிவினரும் தனித்தனியே நடத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு தாராபுரம் டி.எஸ்.பி. கலையரசன் தலைமையில் எஸ்.ஐ. விஜயபாஸ்கர் முன்னிலையில் இரு தரப்பினரும் எந்த நாட்களில் எந்த நேரத்தில் போட்டிகள் மற்றும் விழாக்கள் நடத்த வேண்டும் என பட்டியலிட்டு கொடுக்கப்பட்டிருந்தது.



இந்த நிலையில் எம்ஜிஆரின் 107-ஆவது பிறந்தநாள் விழா மற்றும் பொங்கல் விளையாட்டு போட்டிகளை ஒரு பிரிவினர் திருவள்ளுவர் குலச்சங்கம் திருவள்ளுவர் இளைஞர் நற்பணி மன்றதை சேர்ந்த நபர்கள் நடத்தி வந்தனர். இதில் மற்றொரு பிரிவான வாழும் வள்ளுவர்குலம் இளைஞர் நலச்சங்கத்தை சேர்ந்தவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தியதாக கூறி மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு பிரிவினர்களும் இடையே வாய் சண்டை இட்டுக் கொண்டனர்.



இதில் ஒரு பிரிவினர் மற்றொரு பிரிவினரை ஒருமையில் பேசியதாக கூறி தாராபுரம் காவல் நிலையத்தை ஆண்கள்- பெண்கள் என 100-க்கும் மேற்பட்டோர் தங்கள் குல பெண்களை ஒறுமையில் பேசியதாகவும், அவ்வாறு பேசிய மற்றொரு பிரிவில் உள்ள நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலைய முன்பு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.



தாராபுரம் காவல் நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனைத் தொடர்ந்து நாளை ஜனவரி 18-ம் தேதி காலை சம்பந்தப்பட்ட இடத்திற்கு போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தி. உண்மை எனத் தெரியும் பட்சத்தில் ஒருமையில் பேசிய நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து தருவதாக போலீசார் வாக்குறுதி அளித்தனர்.



இதனைத் தொடர்ந்து சாலை அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட திருவள்ளுவர் குலச்சங்கத்தை சேர்ந்தவர்கள் அங்கிருந்து தற்காலிகமாக கலைந்து சென்றனர். ஒரே சமூகத்தைச் சேர்ந்த இரு பிரிவினர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலால் தாராபுரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...