40 அடி ஆழ கிணற்றில் விழுந்த காட்டு யானை மீட்கப்பட்டு வனப்பகுதிக்குள் அனுப்பப்பட்டது, வனத்துறையின் இந்த முயற்சிக்கு பொதுமக்கள், வன ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டம் பாலமலை அருகே உள்ள கோவனூர் என்ற கிராமத்தின் அருகில் செவ்வாய்கிழமை இரவு காட்டு யானை கூட்டம் ஓன்று புகுந்தது. அப்போது அங்கிருந்த பயன்படுத்தப்படாத தோட்டத்து கிணற்றில்  10 வயது மதிக்கதக்க ஆண் யானை தவறி விழுந்தது.

 

இந்நிலையில் யானையின் பிளிறல் சப்தம் கேட்ட அக்கிராம மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் புதன்கிழமை யானையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 40 அடி கிணற்றில் விழுந்த காட்டு யானையை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன, எனினும் இரவு நேரம் ஆனதாலும், மற்ற காட்டு யானை கூட்டம் வந்ததாலும் யானையை மீட்கும் பணியை ஒத்தி வைத்தனர். முதல் உதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டதை தொடர்ந்து வியாழக்கிழமை காலை 6 மணி முதல் யானையை மீட்கும் பணி துவங்கியது.



வனத்துறையினர், தீயணைப்பு துறையினர் ஆகியோர் இணைந்து யானையை கிணற்றில் இருந்து மீட்கும் பணியை துவங்கினர், மேலும் வனத்துறை மருத்துவர்கள் அசோகன், வியஜராகவன் ஆகியோர் தலைமையில் மருத்துவ குழுவினர் முதலில் யானைக்கு  மயக்க மருந்து செலுத்தினர். பின்னர் கிணற்றின் உள்ளே சென்ற வனத்துறையினர் கிரேன் உதவியுடன் யானையை கட்டி பாதுகாப்பாக மேலே கொண்டு வந்தனர். பின்னர் யானையின் உடலில் ஏற்பட்ட காயங்களுக்கு மருந்துகளும் ஊசிகளும் போடப்பட்டது.யானையின் கால்களில் அடியேதும் படாததால் மீண்டும் வனப்பகுதிக்குள் யானையை அனுப்ப முடிவு செய்த வனத்துறையினர் கட்டப்பட்ட கயிறுகளை அவிழ்த்த உடன் யானை வனப்பகுதிக்குள் ஓடிச்சென்றது. 

இது குறித்து மாவட்ட வன அலுவலர் ராமசுப்பிரமணியன் கூறுகையில் மீட்பு பணி சிறப்பாக நடைபெற்றதாகவும், யானையின் கால்களில் அடி படாததால் மீண்டும் வனப்பகுதிக்குள்ளேயே அனுப்பியதாக கூறிய அவர் தனி குழு அமைக்கப்பட்டு அந்த யானை அதன் கூட்டத்துடன் சேர்க்கப்படும் என தெரிவித்தார். 40 அடி ஆழ கிணற்றில் விழுந்த யானையை 30 மணி நேரத்தில் உயிருடன் மீட்டு வனப்பகுதிக்குள் அனுப்பிய வனத்துறையினருக்கு பொதுமக்கள் விலங்கு நல ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...