கற்பகம் நிகர்நிலை பல்கலைக் கழகத்திற்க்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படை காவல் துணைக் தலைவர் ஸ்ரீ மோசஸ் தினகரன் வருகை

கற்பகம் நிகர்நிலை பல்கலைக் கழகத்திற்கும், ஆவடி மத்திய ரிசர்வ் போலீஸ் படைக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், காவல் துணைக் தலைவர் அவர்களும் கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழக பதிவாளர் அவர்களும் கையெழுத்திட்டனர்.


கோவை: மத்திய ரிசர்வ் போலீஸ் படையின், காவல் துணைக் தலைவர் ஸ்ரீ மோசஸ் தினகரன் அவர்கள், கற்பகம் நிகர்நிலை பல்கலைக் கழகத்திற்க்கு இன்று வருகை புரிந்தார்.

கற்பகம் நிகர்நிலை பல்கலைக் கழகத்திற்கும், ஆவடி மத்திய ரிசர்வ் போலீஸ் படைக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், காவல் துணைக் தலைவர் அவர்களும் கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழக பதிவாளர் அவர்களும் கையெழுத்திட்டனர். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் போது கற்பகம் நிகர்நிலை பல்கலைக் கழக துணைவேந்தர் பேராசிரியர் டாக்டர் பி. வெங்கடாசலபதி, அவர்கள் உடனிருந்தார்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கவும், மத்திய ரிசர்வ் போலீஸ் படை காவலர்களின் மூன்று குழந்தைகளுக்கு வருடா வருடம் இலவச கல்வி வழங்கிடவும் முடிவு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 350 மாணவர்கள் கலந்து கொண்டனர்.



இந்த நிகழ்ச்சியில், லெப்டினன்ட் எஸ்.நித்யா வரவேற்றுப் பேசினார். சைத் பாய், உதவி கமாண்டன்ட் அவர்கள் சிஆர்பிஎஃப் வேலை வாய்ப்புகள் குறித்து சிறப்புரை ஆற்றினார். கேப்டன் டாக்டர் கே.பி. ஸ்ரீதர் நன்றியுரை வழங்கினார். S.K.தினேஷ், உதவி கமாண்டன்ட் மற்றும் காவல் உதவி துணை-ஆய்வாளர்கள் ஏற்பாட்டுக் குழுவிற்கு உறுதுணையாக இருந்தனர்.

Newsletter

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...