உடுமலை மூணாறு சாலையில் கூட்டம் கூட்டமாக உலா வரும் காட்டு யானைகள்- போக்குவரத்து பாதிப்பு

புங்கன் ஓடை அருகில் பத்துக்கு மேற்பட்ட காட்டு யானைகள் குட்டிகளுடன் உலா வந்ததால் உடுமலை மூணார் சாலையில் சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை மூணாறு சாலை அடர்ந்த வனப்பகுதி நடுவில் அமைந்துள்ளது. இந்த நிலையில் வனவிலங்குகள் தண்ணீரை தேடி கடந்த சில தினங்களாகவே நிலப்பரப்பு பகுதிக்கு அதிகளவு வர துவங்கியுள்ளன.

குறிப்பாக உடுமலை மூணாறு சாலையில் காமனூத்து பள்ளம், எஸ் பெண்ட், புங்கன் ஓடை உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகின்றது. இந்த நிலையில் புங்கன் ஓடை அருகில் பத்துக்கு மேற்பட்ட காட்டு யானைகள் குட்டிகளுடன்உலா வந்ததால் உடுமலை மூணார் சாலையில் சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அப்போது ஒரு சில வாகன ஓட்டிகள் அதிக சத்தத்தை எழுப்பி யானைகளுக்கு தொந்தரவு செய்தனர். எனவே உடுமலை மூணாறு சாலையில் செல்லும் சுற்றுலாப் பயணிகள் வனவிலங்குகள் மிரட்சி அடையும் வகையில் ஒலி எழுப்ப கூடாது. அவற்றின் மீது கற்களை வீசுவதோ, செல்பி புகைப்படம் எடுப்பதோ முயற்சி செய்யக் கூடாது என உடுமலை வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் உடுமலை மூணாறு சாலையில் யானைகள் கூட்டம் கூட்டமாக வந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...