உடுமலை மூணாறு சாலையில் கூட்டம் கூட்டமாக உலா வரும் காட்டு யானைகள்- போக்குவரத்து பாதிப்பு

புங்கன் ஓடை அருகில் பத்துக்கு மேற்பட்ட காட்டு யானைகள் குட்டிகளுடன் உலா வந்ததால் உடுமலை மூணார் சாலையில் சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை மூணாறு சாலை அடர்ந்த வனப்பகுதி நடுவில் அமைந்துள்ளது. இந்த நிலையில் வனவிலங்குகள் தண்ணீரை தேடி கடந்த சில தினங்களாகவே நிலப்பரப்பு பகுதிக்கு அதிகளவு வர துவங்கியுள்ளன.

குறிப்பாக உடுமலை மூணாறு சாலையில் காமனூத்து பள்ளம், எஸ் பெண்ட், புங்கன் ஓடை உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகின்றது. இந்த நிலையில் புங்கன் ஓடை அருகில் பத்துக்கு மேற்பட்ட காட்டு யானைகள் குட்டிகளுடன்உலா வந்ததால் உடுமலை மூணார் சாலையில் சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அப்போது ஒரு சில வாகன ஓட்டிகள் அதிக சத்தத்தை எழுப்பி யானைகளுக்கு தொந்தரவு செய்தனர். எனவே உடுமலை மூணாறு சாலையில் செல்லும் சுற்றுலாப் பயணிகள் வனவிலங்குகள் மிரட்சி அடையும் வகையில் ஒலி எழுப்ப கூடாது. அவற்றின் மீது கற்களை வீசுவதோ, செல்பி புகைப்படம் எடுப்பதோ முயற்சி செய்யக் கூடாது என உடுமலை வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் உடுமலை மூணாறு சாலையில் யானைகள் கூட்டம் கூட்டமாக வந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...