சிவில் வழக்கில் தலையிட்டு பாதிக்கப்பட்டவரை குனியமுத்தூர் இணை ஆணையர் மிரட்டுவதாக பாதிக்கப்பட்டவர் புகார்

நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது சட்டத்திற்கு புறம்பாக காவல்துறை உதவியோடு சண்முகம் மற்றும் அவரது குடும்பத்தை மிரட்டி வருகின்றனர். இதற்கு குனியமுத்தூர் காவல் நிலையம் அதிகாரிகளும் உடந்தையாக இருப்பதாக பாதிக்கப்பட்டவர் புகார் கூறினார்.


கோவை: கோவையில் சிவில் வழக்கில் மாநகர காவல்துறை இணை ஆணையர் ரகுபதி ராஜா தலையிட்டு பொய் வழக்கு போடுவதாக கூறி இருந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்கள், கோவை காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர்.

சண்முகம் என்பவர் கோவை மாவட்டம் சுண்டக்காமுத்தூர் பகுதியில் வசித்து வருகிறார். சண்முகம் மற்றும் அவரது மனைவிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால் ஆனந்த என்பவரை அணுகி நிலத்தை வைத்து இரண்டு லட்ச ரூபாய் கடன் பெற்றுள்ளனர். ஆனால், ஆனந்த், சண்முகத்திற்கு தெரியாமல் நிலத்தை வேறொரு நபருக்கு பத்திரத்தை மாற்றி சண்முகத்தை ஏமாற்றி நிலத்தை விற்பனை செய்துள்ளார்.

பின்னர் சிவானந்தம், சக்திவேல் மற்றும் கனகராஜ் சண்முகத்தை மிரட்டி நிலம் எனக்கு சொந்தம் என்று பிரச்சனை செய்துள்ளார். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதன் பின்னர் சண்முகம் கோவை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தற்போது உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது.

நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது சட்டத்திற்கு புறம்பாக காவல்துறை உதவியோடு சண்முகம் மற்றும் அவரது குடும்பத்தை மிரட்டி வருகின்றனர். இதற்கு குனியமுத்தூர் காவல் நிலையம் அதிகாரிகளும் உடந்தையாக இருப்பதாக பாதிக்கப்பட்டவர் கூறினார்.

குனியமுத்தூர் இணை ஆணையர் ரகுபதிராஜா சண்முகம் இடத்திற்கு சென்று அங்கு பணிபுரியும் வேலை ஆட்களை மிரட்டி உள்ளார். வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது காவல்துறை அதிகாரிகள் தலையிட்டு பாதிக்கப்பட்டவரை மிரட்டி வருகின்றனர். ஏற்கனவே கடந்த வாரம் சட்ட ஒழுங்கு ஏடிஜிபி அறிக்கை ஒன்று வெளியீட்டார். அதில், சிவில் வழக்குகளில் காவல்துறை தலையிடக்கூடாது என்று கூறியும், அதனை மீறி தலையிட்டு பாதிக்கப்பட்டவரை காவல்துறையினர் மிரட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...