கோவையில் ஜனவரி 24 முதல் 30ம் தேதி வரை மனித நேய வார விழா நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

அனைத்து அரசுத் திட்டங்களை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஜனவரி 24-ஆம் தேதி கண்காட்சி நடத்தப்படும் என்றும் பொள்ளாச்சியில், 25ம் தேதி ஆதிதிராவிடா் மாணவா்களுக்கான நாட்டியம், நாடகம், பேச்சுப் போட்டி நடைபெறும் என்றும் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மனித நேய வார விழாவையொட்டி, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினர் நலத் துறையும், செய்தி மக்கள் தொடர்புத் துறையும் இணைந்து அனைத்து அரசுத் திட்டங்களை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஜனவரி 24-ஆம் தேதி கண்காட்சி நடத்தப்படும்.

ஆதிதிராவிடா் மாணவா்களுக்கான நாட்டியம், நாடகம், பேச்சுப் போட்டி கோவை, பொள்ளாச்சியில் ஜனவரி 25-ஆம் தேதி நடத்தப்படும். ஜனவரி 26-ஆம் தேதி ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கலை அறிவியல் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்ட மாணவா்கள் மூலம் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் பட்டியல் இன மாணவ, மாணவிகள் வசிக்கும் பகுதியில் கலந்துரையாடி, அவா்களது இல்லத்தில் தேநீா் விருந்துடன் மனமகிழ் நிகழ்ச்சி நடத்தப்படும்.

ஜனவரி 27-ஆம் தேதி காவல் துறை சார்பில் மதத் தலைவா்கள், பட்டியலின சான்றோர் ஒன்று கூடும் மத நல்லிணக்க கூட்டம் மற்றும் நீதிபதிகள், வழக்குரைஞா்கள், காவல் துறையினா் கலந்துகொள்ளும் வகையில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் குறித்த கருத்தரங்குகள் நடைபெறும். கல்வித் துறையின் மூலம் முதன்மைக் கல்வி அலுவலா் தலைமையில் அனைத்துப் பள்ளிகளிலும் ஜனவரி 28 -ஆம் தேதி கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். கோவை மாவட்ட தொழில் மைய அலுவலக வளாகத்தில் சமுதாயத்தில் முன்னேற்ற நிலையில் உள்ள ஆதிதிராவிட அலுவலா்கள், மருத்துவா்கள், பொறியாளா்கள், வழக்குரைஞா்கள், தொழில்முனைவோர் மற்றும் அரசியல்வாதிகள் ஆகியோரைக் கொண்டு, சமுதாய பொருளாதார முன்னேற்ற சிந்தனைக் கூட்டங்கள் ஜனவரி 29-ஆம் தேதி நடத்தப்படும்.

கோவை பிஷப் அப்பாசாமி கல்லூரி வளாகத்தில் மனிதநேய வார விழாவையொட்டி, நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்குப் பரிசுகள் வழங்குதல், கல்வி ஊக்கத் தொகை வழங்குதல், தொழில் முனைவோருக்கான நிதியுதவி வழங்குதல் உள்ளிட்ட நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா ஜனவரி 30-ஆம் தேதி மதியம் 3 மணிக்கு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரின் OSD நியமனம் ரத்து: தமிழக அரசு உத்தரவு

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரான ரிக்கே ராதன் பண்டிட் வெற்றிவேலின் அரசியல் OSD நியமனத்தை, கடும் எதிர்ப்புகள் மற்றும் விமர்ச...

பொதுமக்களை விரட்டிய காங்கேயம் காளை; மரத்தில் ஏறி உயிர்தப்பிய வாலிபர்கள்.

கோவை உக்கடம் வாளாங்குளம் பகுதியில் நேற்று இரவு சுற்றித் திரிந்த காங்கேயம் காளை ஒன்று திடீரென பொதுமக்களை விரட்டியதில், பய...

கோவை வடக்கு-பீளமேடு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணி வைத்த இருவர் கைது

கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த வழக்கில் ரயில்வே பாதுகாப்புப்...

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (52) தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததோடு, 4 கிலோ கஞ்சா வ...

பொள்ளாச்சி ஆழியாறு பகுதியில் மது போதையில் தள்ளி இளைஞர் கொலை - குற்றவாளி கைது

பொள்ளாச்சி வட்டம் ஆழியாறு நெல்லித்துறை பகுதியில் குடும்ப பூசல் காரணமாக மது போதையில் வந்த ஆனந்த் என்பவர் பாலகிருஷ்ணனை தள்...