பொதுமக்களை விரட்டிய காங்கேயம் காளை; மரத்தில் ஏறி உயிர்தப்பிய வாலிபர்கள்.

கோவை உக்கடம் வாளாங்குளம் பகுதியில் நேற்று இரவு சுற்றித் திரிந்த காங்கேயம் காளை ஒன்று திடீரென பொதுமக்களை விரட்டியதில், பயந்த மக்கள் மரங்களில் ஏறி தப்பிய நிலையில், இரண்டு வாலிபர்களை காளை முட்டி தூக்கி வீசியதாக கூறப்படுகிறது.


கோவை: கோவை உக்கடம் வாளாங்குளம் பகுதியில் நேற்று இரவு காங்கேயம் காளை ஒன்று சாலைகளில் சுற்றித் திரிந்ததால் பொதுமக்களிடையே அச்சம் நிலவியது.

அந்த பகுதியில் இருந்த சில வாலிபர்கள், காளையை பார்த்து மரத்தின் மீது ஏறி அதன்மீது கல் மற்றும் சில பொருட்களை வீசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த காளை அவர்களை விரட்டத் தொடங்கியுள்ளது.

பின்னர் மரத்திலிருந்து கீழே இறங்கிய இரண்டு வாலிபர்களை காளை முட்டி தூக்கி வீசியதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து காளை சாலைகளில் வேகமாக அங்கும் இங்கும் ஓடியதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கோவை மாநகர போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது, வாளாங்குளம் குளக்கரையில் மக்கள் நடமாட்டம் குறைவாக உள்ள பகுதியில் காளை பதுங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

தொடர்ந்து, காளையின் உரிமையாளர் யார், கயிறு அவிழ்த்து தானாக வந்ததா அல்லது யாராவது காளையை அங்கு விட்டுச் சென்றார்களா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மக்கள் அதிகமாக நடமாடும் பகுதியில் காங்கேயம் காளை திடீரென ஆக்ரோஷமாக நடந்து பொதுமக்களை விரட்டிய சம்பவம் காரணமாக உக்கடம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...