வீடுகளில் தீபங்களை ஏற்றி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை கொண்டாடுவோம் - வானதி சீனிவாசன் வேண்டுகோள்

நாம் கார்த்திகை தீபத்தன்று நூற்றுக்கணக்கான தீபங்களை ஏற்றி கொண்டாடுவது போல இந்த தீபங்களை ஏற்றி நாம் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை கொண்டாடுவோம் என்று சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.


கோவை: கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் ஜனவரி 22-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் உள்ள ராம பக்தர்கள் மற்றும் கோயில் நிர்வாகம் ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்வை பார்ப்பதற்காக ஏற்பாடுகள், அன்னதானம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதை நேற்று முதல் தமிழக அரசு காவல்துறை வாயிலாக மிரட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். இதற்காக ராம பக்தர்கள் கொதித்துப் போய் இருக்கிறார்கள். இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சி மகளிர்களுக்கு மட்டுமில்லாமல் தமிழகத்தில் உள்ள அனைத்து தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்கும் நான் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன்.

அதன்படி பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ராமர் கோயில் கும்பாபிஷேக நாளிலே அனைவரது வீட்டிலும் விளக்கேற்றி கொண்டாட சொல்லி இருக்கிறார். தமிழக அரசு, பக்தர்களின் உணர்வுகளை மதிக்காமல் இவ்வாறு மிரட்டுகின்ற பொழுது, நாம் அனைவரும் நமது ராம பக்தியை காட்டுவதை மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும்.

அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் 5 விளக்குகளை ஏற்றச் சொல்லி இருக்கிறார் பிரதமர். நாம் கார்த்திகை தீபத்தன்று நூற்றுக்கணக்கான தீபங்களை ஏற்றி கொண்டாடுவது போல இந்த தீபங்களை ஏற்றி நாம் கொண்டாடுவோம் என்று கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

Newsletter

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....