கோவை மாநகரில் குடிநீா்க் கட்டணம் நிலுவை - 10 குடிநீா் இணைப்புகள் துண்டிப்பு

மேற்கு மண்டலம் 33-ஆவது வார்டில் ஒரு தனியார் வணிக வளாகம் சில ஆண்டுகளாக மாநகராட்சிக்கு குடிநீா்க் கட்டணம் செலுத்தவில்லை. குடிநீா்க் கட்டணம் செலுத்தாததால் அந்த வணிக வளாகத்துக்கு வழங்கப்பட்டிருந்த 2 குடிநீா்க் குழாய் இணைப்புகளும் சனிக்கிழமை துண்டிக்கப்பட்டன.


கோவை: கோவை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள 100 வார்டுகளில் 5 லட்சத்துக்கும் மேலான வீடுகள், தனியார் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள் உள்ளன. இவைகளுக்கு மாநகராட்சி சார்பில் குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஏராளமான நிறுவனங்கள் மாநராட்சிக்கு குடிநீா்க் கட்டணம் செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து, நிலுவைக் குடிநீா்க் கட்டணத்தை வசூலிக்க மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்நிலையில், மேற்கு மண்டலம் 33-ஆவது வார்டில் உள்ள ஒரு தனியார் வணிக வளாகம் சில ஆண்டுகளாக மாநகராட்சிக்கு குடிநீா்க் கட்டணம் செலுத்தவில்லை. அதன் உரிமையாளரிடம் நிலுவைக் குடிநீா்க் கட்டணம் ரூ.12 லட்சத்து 40 ஆயிரத்தை செலுத்தும்படி மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டது. ஆனால், அவா் குடிநீா்க் கட்டணம் செலுத்தாததால் அந்த வணிக வளாகத்துக்கு வழங்கப்பட்டிருந்த 2 குடிநீா்க் குழாய் இணைப்புகளும் சனிக்கிழமை (ஜன.20) துண்டிக்கப்பட்டன.

இதேபோல, மத்திய மண்டலத்தில் குடிநீா்க் கட்டணம் செலுத்தாத 8 வீடுகளின் குடிநீா் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டன.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...