மருதமலையில் தைப்பூச விழாவை முன்னிட்டு சுப்பிரமணியசுவாமி கோவிலில் துணை கமிஷனர் ஆய்வு

தேர்திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் குறித்து மாநகர போலீஸ் துணை கமிஷனர் சரவணகுமார், வடக்கு ஆர்.டி.ஓ. கோவிந்தன், வடக்கு தாசில்தார் மணிவேல் ஆகியோர் நேற்று நேரில் ஆய்வு செய்தனர்.


கோவை: கோவை மாவட்டம் வடவள்ளி, மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் கடந்த 19ம் தேதி தைப்பூச தேர் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. மேலும் தைப்பூச திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, வரும், 24ம் தேதி, திருக்கல்யாண உற்சவமும், 25ஆம் தேதி, திருத்தேர் வடம் பிடித்தலும் நடக்கிறது. இதனையடுத்து, மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலிலுக்கு, லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால், மாவட்ட நிர்வாகம், கோவில் நிர்வாகம், மாநகர போலீசார் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தேர்திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு, தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் குறித்து, மாநகர போலீஸ் துணை கமிஷனர் சரவணகுமார், வடக்கு ஆர்.டி.ஓ. கோவிந்தன், வடக்கு தாசில்தார் மணிவேல் ஆகியோர் நேற்று (ஜன.21) நேரில் ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்விற்கு பின், பக்தர்கள், மலை மேல் உள்ள கார் பார்க்கிங் பகுதியில் இருந்து கோவிலுக்கு மேலே செல்ல, பழைய படிக்கட்டு பாதையிலும், கோவிலில் இருந்து கீழே இறங்கும் பக்தர்கள், ராஜகோபுரத்தின் வழியாக கீழே இறங்கவும், பக்தர்கள் வரிசையில் நின்று பஸ் ஏற தேவையான வசதிகளையும் ஏற்படுத்த அறிவுறுத்தினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...