கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு ஏர் கலப்பையுடன் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

விவசாய தொழிலாளர் நல வாரியத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும். 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும். கூலி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்று விவசாய தொழிலாளர்கள் வலியுறுத்தினர்.


கோவை: தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் துரைசாமி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மண்வெட்டி, ஏர் கலப்பையுடன் வந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் விவசாய தொழிலாளர்களுக்கு முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியால் கொண்டுவரப்பட்ட நல வாரியம் கடந்த அதிமுக ஆட்சியில் கலைக்கப்பட்டது.

கலைக்கப்பட்டு விவசாய தொழிலாளர்களுக்கு உதவாத உழவர் பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. எனவே இதனை கைவிட்டு விவசாய தொழிலாளர் நல வாரியத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும். 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும், கூலி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் 30-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...