பிளாஸ்டிக் பொருட்களுக்கான மாற்றுபொருட்கள்: கோவை மாநகராட்சி நடத்தும் சிறப்பு கண்காட்சி நாளை துவக்கம்

கோவையில் வரும் மே மாதம் 1-ம் தேதி முதல் பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்ட பைகள் மற்றும் தட்டுகள் உள்ளிட்ட பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த பொருட்களுக்கு மாற்றுப் பொருட்களை நுகர்வோர்கள் மற்றும் வணிகர்கள் தெரிந்து கொள்ளும் விதமாக கோவை மாநகராட்சி சார்பில் 'மை ஷாப்பிங், மை பேக்' என்ற கண்காட்சி நடைபெற உள்ளது. 



நாளை (சனிக்கிழமை) காலை 11 மணியளவில் ஆர்.எஸ்.புரம் மாநகராச்சி கலையரங்கத்தில் நடைபெற உள்ள இக்கண்காட்சியை கோவை மாநகரட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயன் தொடங்கி வைக்கிறார். மார்ச் 25 மற்றும் 26-ம் தேதிகளில் நடைபெறும் இக்கண்காட்சி காலை 11 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை நடைபெறும் என்றும் இக்கண்காட்சியை பார்வையிட எவ்வித கட்டணங்களும் செலுத்த தேவை இல்லை என்றும் மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இக்கண்காட்சி குறித்து ராக் அமைப்பின் தலைவர் ரவீந்திரன் கூறியதாவது :- 

வணிக நிறுவனங்கள், சிறு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தி வரும் பிளாஸ்டிக்கால் ஆன பைகள், குவளைகள், தட்டுகள் உள்ளட்ட பொருட்கள் ஒருமுறை பயன்படுத்திய பின்னர் தூக்கியெறியப்பட்டு வருகின்றன. இவ்வாறான பொருட்கள் மண்ணில் மக்காமல் இருந்து நில வளத்தையும், நீர்வளத்தையும் கெடுக்கிறது. மேலும், மழைக் காலங்களில் சாக்கடைகளுக்குள் சிக்கும் பிளாஸ்டிக் பைகள் கழிவு நீர் வழிப் பாதையை அடைத்துவிடுகின்றன. இதனால் கழிவு நீர் சாலைகளில் ஓடும் அவல நிலை ஏற்பட்டுவிடுகிறது. 

இவை தவிர மேலும் பல்வேறு பிரச்சனைகள் பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படுகிறது. இதை தடுக்க பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றுப்பொருட்களை கோவைக்கு கொண்டுவர மாநகராட்சி முடிவு செய்தது. மாநகராட்சியின் இந்த திட்டத்திற்கு ராக் உள்ளிட்ட பல்வேறு சமூக நல அமைப்புகள் சில ஆலோசனைகள் வழங்கின. அதன்படி நாளை மாற்றுப் பொருட்களுக்கான 'மை ஷாப்பிங், மை பேக்' கண்காட்சி நடைபெறுகிறது.



பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடத்தப்படும் இக்கண்காட்சிக்கு அனுமதி இலவசம். கோவையில் வரும் மே-1 ம் தேதி முதல் பிளாஸ்டிகால் தயாரிக்கப்படும் பைகள் மற்றும் தட்டுகளுக்கு தடைவிதிக்கப்படுகிறது. இந்த சூழலில் மாற்றுப் பொருட்களுக்கான தேவைகள் அதிகரிக்கும். அதன்படி, துணிப்பைகள், மரத்தாலான ஸ்பூன்கள், மட்டைத் தட்டுகள் மற்றும் நாரினால் செய்யப்பட்ட உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் 30-க்கும் மேற்பட்ட ஸ்டால்களில் இடம்பெறவுள்ளன. மேலும், இந்த பொருட்களை தயாரிப்பதற்கான இயந்திரங்களும் இதில் இடம் பெற உள்ளன. 



புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கும், இதுபோன்ற பொருட்களை விநியோகம் செய்ய நினைப்பவர்களுக்கும் 'மை ஷாப்பிங், மை பேக்' கண்காட்சி பயனுள்ளதாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...