கோவை மாவட்டத்தில் நெரிசல் மிகுந்த சாலைகளை விரிவாக்கம் செய்ய வேண்டும் - ஆட்சியரிடம் எம்.பி., பி.ஆர்‌.நடராஜன் கோரிக்கை

கோவை பாரதியார் பல்கலைக் கழகத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு நீதிமன்ற தீர்ப்பு வழிகாட்டி உள்ளபடி இழப்பீடு விரைவாக வழங்கிட உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கேட்டுக் கொண்டார்.


கோவை: கோவை மாவட்ட மக்களின் பல்வேறு கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு வருவதற்கும், மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து விவாதிக்கவும் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் செவ்வாயன்று கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்தார்.



கோவை பாரதியார் பல்கலைக் கழகத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு நீதிமன்ற தீர்ப்பு வழிகாட்டி உள்ளபடி இழப்பீடு விரைவாக வழங்கிட உரிய நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பீளமேடு தண்ணீர் பந்தல் பகுதியில் உள்ள S வளைவு பகுதியில் போக்குவரத்து நெரிசலை சரிசெய்திட ரவுண்டானா அமைத்திட நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும், தண்ணீர் பந்தல் பகுதியில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணியை விரைவுபடுத்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.



மதுக்கரை மரப்பாலம் பகுதியில் தரைப்பாலம் விரிவுபடுத்துவது குறித்தும், சாய்பாபா காலனி பகுதியில் அமைய உள்ள மேம்பாலம் குறித்தும், மாவட்ட ஆட்சியருடன் நாடாளுமன்ற உறுப்பினர் விவாதித்தார். சமீபத்தில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், சட்டமன்ற உறுப்பினர்களுடன் சாய்பாபா காலனி மேம்பாலம் அமைய உள்ள பகுதியை நேரடியாக ஆய்வு செய்து இருந்தார்.



அது குறித்தும், அப்பகுதியில் எதிர்காலத்தில் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் விதத்தில் மேம்பாலம் அமைய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். சந்திப்பின் போது மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் யு.கே.சிவஞானம், கே.எஸ்.கனகராஜ், 24வது வார்டு மாமன்ற உறுப்பினர் பூபதி, மாவட்ட குழு உறுப்பினர் ஜாகீர், பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு நிலம் அளித்த விவசாயிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...