தமிழ்நாட்டில் முதன்முரையாக ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு மருத்துவ சுற்றுலாவிற்க்கு தரமான மருத்துவமனை சான்று


மருத்துவ பயணம் மற்றும்  நலமுடன் ஒரு சுற்றுலா தமிழகத்திற்கு முதல் முறையாக கோவையில் ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு முதல் சான்றிதழ்அ மெரிக்காவில் உள்ள எம்டிக்யுயுஏ MTQUA மருத்துவ சுற்றுலாவுக்கு உகந்த மருத்துவமைனகள், கிளினிக்குகள், ஏஜென்சிகள், சிறப்பு மருத்துவ சிகிச்சை மையங்கள், ரிசார்ட்டுகள் போன்றவைகளை ஆராய்ந்து, சான்றிதழ்களை வழங்கி வருகிறது. 

இதற்கான பயிற்சிப்பட்டறை, தர நிர்ணயம் மற்றும் முறைகளையும் வழங்கி வருகிறது. உலகில் மிக சில இடங்களில் மட்டுமே உள்ள பல்கலைக்கழகங்களில் மருத்துவம் சார்ந்த கல்விமுறைகள் கற்பித்தல் உள்ளன. ஆதாரப்புர்வமான தரநிர்ணயங்களின் அடிப்படையில், மருத்துவ சுற்றுலா பயணத்துக்கான வசதிகளை தரும் நிறுனங்களை தேர்வு செய்து சான்று வழங்குகின்றன. தகவல் தொடர்பு, இயக்கம், பண்பாடு, கலாச்சாரம், சந்தைப்படுத்துதல், இணைய பயன்பாடு, தனிமை காப்பு போன்ற வாடிக்கையாளர்கள் சேவைகளை மதிப்பீடு செய்கிறது. மருத்துவம் மற்றும் சேவை அளிப்போர் தர நிர்ணயத்தின் அளவுக்கோ, அதை விட மேலாகவோ செயல்படுவோருக்கு சான்றுகள் அளிக்கப்படுகின்றன. இந்த நிறுவனம், சமீபத்தில் மருத்துவ சுற்றுலா தொடர்பாக உலகத்தரத்திலான பயிற்சி தரவும் சான்றிதழ்  வழங்கவும் புதிய திட்டத்தை உருவாக்கியது.

மருத்துவ பயணம் மற்றும் சுகாதார நலச்சுற்றுலா தர குட்டமைப்பின் நிறுவனர் ஜூலி மன்ரோ பேசுகையில், “மருத்துவ சுற்றுலா பயணிகள், நம்பகமான அளவில் சிகிச்சை தரும் நிறுவனங்கள் பற்றிய ஆலோசனைகளை வழங்குவோரை நாடுகின்றனர். பிற நாடுகளில் தங்களது பாதுகாப்பு, மற்றும் சிறப்பான சிகிச்சை பற்றியும் உறுதியை அளிக்க வேண்டுகின்றனர்.  சிகிச்சை தரும் டாக்டர்களை பற்றியும், மருத்துவமனையின் பாதுகாப்பு அம்சங்கள் பற்றியும் சொந்தமாக விசாரித்து அறிய வேண்டியள்ளது. இத்தகைய விசாரணையை அவர்கள் மேற்கொள்வது மிகவும் கடினமானது. இந்நிலையில் சர்வதேச அளவில் சான்று பெற்ற ஆலோசகரால் செய்ய முடியும். மருத்துவ சுற்றுலா துறையில் சான்று வழங்குவது ஒரு மகத்தான மைல்கள் என்றே சொல்லலாம். மாற்று முறை மருத்துவம் விரும்புவோருக்கும் தேடுவோருக்கும் இது ஒரு சிறப்பான வழிகாட்டுதல்," என்றார்.

MTQuA நிறுவனர் மற்றும் தலைவர் ஜூலி டபிள்யு மன்ரோ,  அமெரிக்கா நிதி நிர்வாக முதுநிலை ஆலோசகர்   ஜெனட் எம் கெட்டஸ் ஆகியோர் ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனையில் 3 நாட்களாக இங்குள்ள வசதிகளை ஆராய்ந்து சான்று வழங்கியுள்ளனர். இதையடுத்து தமிழ்நாட்டிலேயே இத்தகைய சான்றிதழ் பெறும் முதல் மருத்துவமனையாக திகழ்கிறது.  சான்றிதழை எஸ்என்ஆர் சன்ஸ் அறக்கட்டளை வர்த்தக அலுவலர் சுவாதி ரோஹித் பெற்றுக் கொண்டார். மருத்துவமனை செயல் அதிகாரி சி.வி ராம்குமார், டீன் சுகுமாறன், மருத்துவ இயக்குனர் டாக்டர் ஐசக் மோஸஸ் ஆகியோர் உடனிருந்தனர்.

Newsletter

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...

Coimbatore–Nagercoil Express to Run on Diverted Route via Podanur, Poallchi

The Coimbatore–Nagercoil Express will operate on a diverted route on September 5, 8, 10 and 12 due to sleeper renewal an...

கோவையில் 15 அடி உயரத்தில் இருந்து தொழிலாளி தவறி விழுந்து காயம்; பாதுகாப்பு வசதிகள் குறித்து புகார்

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சுமார் 15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த தொ...