நாடாளுமன்றத் தேர்தலில் திமுக, ஆடு, மாடு, பன்னிகளுடன் கூட்டணி - உடுமலையில் சீமான் பேச்சு

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் வழக்கம் போல் தனித்துப் போட்டியிட்டு அபார வெற்றி பெறுவோம் என்றும் ஓட்டுக்காக நான் பேசுவேன் இல்லை. நாட்டுக்காக பேசுவேன். இதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் மொழிபோர் தியாகிகளுக்கு வீரவணக்க பொதுக்கூட்டம் தாஜ் திடலில் நடைபெற்றது. இதில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் வழக்கம் போல் தனித்துப் போட்டியிட்டு அபார வெற்றி பெறுவோம், ஓட்டுக்காக நான் பேசுவேன் இல்லை. நாட்டுக்காக பேசுவேன். இதில் எந்த மாற்றமும் இல்லை.

மேலும் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஆடு, மாடுகள், பன்னிகளுடன் திமுக கூட்டணி வைக்க தயாராக உள்ளது என பேசினார். சமூக மாற்றத்தை மாற்ற முடியாது. தமிழ் நாடாக மாற்றுவேன். மொழிப்போர் தியாகிகளுக்கு நினைவிடம். சென்னையில் உறுதியாக நினைவிடம் கட்டுவேன். அப்பொழுது கலைஞர் சமாதி எங்கு போகும் என்று எனக்கு தெரியாது.

தமிழ் தான் எங்கள் உயிர் மூச்சு. உலகம் முழுவதும் தமிழை பரப்புவோம். இந்தி மொழியை பற்றி கவலை இல்லை. தமிழ் மொழி சாதனை படைக்க வேண்டும் என்பது என் லட்சியம். திராவிடம் என்ற சொல்லுக்கு திமுகவிற்கு அர்த்தம் தெரியாது. நீட் தேர்வு ரத்து கையெழுத்து எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட கோரி செங்கல்லை வைத்து மேடைகள் பேசுவார்கள் தவிர நேரில் கொடுக்க தைரியம் இல்லை.

சேலம் மாநாட்டுக்கு 58 கோடி 5000 தன்னார்வலர்கள் ஏற்பாடு செய்தவர்கள். வெள்ளம் சேதம் பகுதிகளுக்கு உதவாதது ஏன்?. மக்களை ஏமாற்றும் கட்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க பட வேண்டும். குஜராத் மற்றும் காஞ்சிபுரத்தில் அரசு மருத்துவமனையில் அவலம் இந்தியாவே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. திமுக மாநாட்டில் மாணவன் படிப்புக்கு கையேந்தும் நிலை மாற வேண்டும் என்றால் தமிழில் ஆட்சி வேண்டும் உட்பட பல்வேறு கருத்துக்களை ஆவேசமாக பேசினார். வீரவணக்க பொதுக்கூட்டத்தில் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...