உடுமலை அமராவதி அணையில் இருந்து இன்று பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு ஆற்று மதகு வழியாக 2229 மில்லியன் கன அடிக்கு மிகாமலும், புதிய ஆயக்கட்டுப் பாசனத்திற்கு 64.45 மில்லியன் கன அடிக்கு மிகாமலும் மொத்தம் 3293.57 மில்லியன் கன அடிக்கு மிகாமல் இன்று முதல் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணை நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில வாரங்களுக்கு முன் மழை பெய்த காரணத்தால் அணைக்கு நீர்வரத்து கணிசமாக வந்து அணையின் நீர்மட்டம் கடந்த சில வாரங்களாகவே முழு கொள்ளவாக உள்ளது.

இந்த நிலையில் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்த நிலையில் இன்று முதல் பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு ஆற்று மதகு வழியாக 2229 மில்லியன் கன அடிக்கு மிகாமலும், புதிய ஆயக் கட்டுப்பாசனத்திற்கு 64.45 மில்லியன் கன அடிக்கு மிகாமலும் மொத்தம் 3293.57 மில்லியன் கன அடிக்கு மிகாமல் இன்று முதல் திறந்துவிடப்பட்டுள்ளது.

வருகின்ற மார்ச் 15-ம் தேதி முடிய 50 நாட்கள் தகுந்த இடைவெளி விட்டு 28 நாட்களுக்கு தண்ணீர் வழங்கபடும். இதனால் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...