மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து வசதிகளுடன் டெம்போ வாகனம் கோவை கங்கா மையத்திற்கு எல்ஜி எக்யூப்மெண்ட்ஸ் நிறுவனம் நன்கொடை

கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வின் ஒரு பகுதியாக கோவை எல்ஜி எக்ப்யூமெண்ட்ஸ் நிறுவனம் மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதுகுத்தண்டு காயம் அடைந்தவர்களுக்கு 41 லட்ச ரூபாய் மதிப்பிலான சக்கர நாற்காலி, ஸ்ட்ரெச்சர் மற்றும் லிப்ட் வசதியுடன் கூடிய போர்ஸ் டெம்போ வாகனத்தை கங்கா முதுகுத்தண்டுவட மறுவாழ்வு மையத்திற்கு நன்கொடையாக வழங்கியது.


கோவை: தமிழகத்தில் முதல் முறையாக மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதுகுத்தண்டு காயம் அடைந்தவர்கள் பயன்பெரும் வகையில் 41 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சக்கர நாற்காலி, ஸ்ட்ரெச்சர், லிப்ட் வசதியுடன் கூடிய டெம்போ வாகனத்தை கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள கங்கா முதுகுத்தண்டுவட மறுவாழ்வு மையத்திற்கு எல்ஜி எக்யூப்மெண்ட்ஸ் நிறுவனம் நன்கொடையாக வழங்கியது.

கங்கா முதுகுத்தண்டுவட மறுவாழ்வு மையம் கடந்த 2014ம் ஆண்டு துவக்கப்பட்ட ஒரு அறக்கட்டளையாகும். மேலும் இது முதுகுத் தண்டுவடம் பாதித்தவர்களுக்கு சிறப்பான சிகிச்சையை அளித்து வருகிறது. இந்த மையம் கோவை மேட்டுப்பாளையம் சாலையில் கவுண்டம்பாளையத்தில் அமைந்துள்ளது.



இது முதுகுத் தண்டுவடம் பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதோடு அது தொடர்பான ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. இங்கு நாளொன்று 15 வெளிப்புற நோயாளிகளுக்கும் 36 உள்புற நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கும் வகையில் பல்வேறு வசதிகள் உள்ளது. கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வின் ஒரு பகுதியாக கோவை எல்ஜி எக்ப்யூமெண்ட்ஸ் நிறுவனம் மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதுகுத்தண்டு காயம் அடைந்தவர்களுக்கு 41 லட்ச ரூபாய் மதிப்பிலான சக்கர நாற்காலி, ஸ்ட்ரெச்சர் மற்றும் லிப்ட் வசதியுடன் கூடிய போர்ஸ் டெம்போ வாகனத்தை கங்கா முதுகுத்தண்டுவட மறுவாழ்வு மையத்திற்கு நன்கொடையாக வழங்கியது.

தமிழகத்தில் முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட முதல் வாகனமாக இது உள்ளது. இது முதுகுத்தண்டு பாதிக்கப்பட்ட நோயாளிகளை மருத்துவமனையில் இருந்து மறுவாழ்வு மையத்திற்கும், அவர்களது வசிப்பிடத்திலிருந்து மறுவாழ்வு மையத்திற்கும், பிசியோதெரபி மற்றும் இதர சேவைகளை மேற்கொள்வதற்கும், நோயாளியை மருத்துவமனையில் அல்லது அவர்களது வீட்டிற்கு கொண்டு செல்லவும் பயன்படுத்தப்பட உள்ளது.



மேலும் இந்த வாகனம் நோயாளிகளின் வீட்டில் இருந்து அவர்களை விளையாட்டு மைதானத்திற்கு அழைத்து சென்று விளையாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் மேலும், சமூக-பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான பயிற்சியைப் பெறுவதற்கு தொழில் பயிற்சி மையங்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்களுக்கு அவர்களை அழைத்துச் செல்லவும் பயன்படுத்தப்பட உள்ளது.

முதுகுத்தண்டில் காயம் அடைந்த நோயாளிகளை பாதுகாப்பான முறையில் மறுவாழ்வு மையங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதால், அவர்களுக்கு ஏற்ப இந்த வாகனம் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சக்கர நாற்காலியில் செல்லும் நோயாளிகள் மற்றும் ஸ்ட்ரெச்சர் நோயாளிகள் லிப்டைப் பயன்படுத்தி வாகனத்தில் ஏறுவதற்கு இது ஒரு உள்ளமைக்கப்பட்ட லிப்டைக் கொண்டுள்ளது.

லிப்ட் பேட்டரி மற்றும் கையால் இயங்கும் இரண்டு வசதிகளையும் கொண்டுள்ளது. போக்குவரத்தின் போது, நோயாளிகளுக்கு எந்தவிதமான பிரச்சினையும் ஏற்படாமல் இருக்க, சக்கர நாற்காலிகளைக் கட்டுவதற்கு பாதுகாப்பு பெல்ட்களைப் பயன்படுத்தலாம். இது முதலுதவி பெட்டி, ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதில் 6 சக்கர நாற்காலிகள் மற்றும் ஒரு ஸ்ட்ரெச்சர் மற்றும் இரண்டு பராமரிப்பாளர்கள் செல்லும் வகையிலும் முழுமையான குளிர்சாதன வசதியைக் கொண்டுள்ளது.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...