பொள்ளாச்சி மாவட்ட கல்வித்துறை அலுவலகம் முன்பு ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்

சோலையார் அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை லோகாம்பாள் தனக்கு கீழ் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களை தன்னுடைய சொந்த வேலைகளை செய்யச் சொல்லி வற்புறுத்தி வருவதாகவும், அப்படி அடிபணியாத ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை துறை ரீதியாக நடவடிக்கை எடுப்பதாகவும் ஆசிரியர்கள் புகார் தெரிவித்தனர்.


கோவை: பொள்ளாச்சியை அடுத்த சோலையார் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வரும் லோகாம்பாள், சக ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களை தரக்குறைவாக பேசி வருவதாக கூறி, அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொள்ளாச்சி மாவட்ட கல்வித்துறை அலுவலகம் முன்பு தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் மற்றும் பல்வேறு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இதில் ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டு தலைமை ஆசிரியை லோகாம்பாள் தனக்கு கீழ் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களை தன்னுடைய சொந்த வேலைகளை செய்யச் சொல்லி வற்புறுத்தி வருவதாகவும், அப்படி அடிபணியாத ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை துறை ரீதியாக நடவடிக்கை எடுப்பதாகவும் புகார் தெரிவித்தனர்.

எனவே சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆசிரியர்கள் கண்டன கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...