மாநில செம்மொழிகளுக்கு நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சம்-பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் புகார்

இந்தியாவில் சமஸ்கிருதம் மொழி பேசக் கூடியவர்கள் 24ஆயிரத்து 891 பேர் என பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 649 கோடி ரூபாய் மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது. ஆனால் 30 கோடி பேர் பேசக்கூடிய தமிழ் உள்ளிட்ட 5 செம்மொழிகளுக்கு வெறும் 29 கோடி ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கியுள்ளது என பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை தெற்கு மாவட்ட திமுக மற்றும் மாணவரணி சார்பில் பொள்ளாச்சி பிளாக் மாரியம்மன் கோவில் ஜீவா திடலில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாநில இணை செயலாளர் மருத்துவர் மகேந்திரன், பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், பொள்ளாச்சி நகர திமுக செயலாளர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.



கூட்டத்துக்கு பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது, மத்திய அரசு மாநில மொழிகளுக்கு துரோகம் இழைத்து வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் செம்மொழிகளாக கருதப்படும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒடியா, சமஸ்கிருதம் போன்ற மொழிகள் வளர்ச்சிக்கு மிகப்பெரிய தொகையை ஒதுக்கி உள்ளது.

இந்தியாவில் சமஸ்கிருதம் மொழி பேசக் கூடியவர்கள் 24ஆயிரத்து 891 பேர் என பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 649 கோடி ரூபாய் மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது. ஆனால் 30 கோடி பேர் பேசக்கூடிய தமிழ் உள்ளிட்ட 5 செம்மொழிகளுக்கு வெறும் 29 கோடி ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கியுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை மாநிலங்களை முடக்குவதற்கும், மாநில மொழிகளை முடக்கும் செயல் என வெட்ட வெளிச்சமாக தெரிகிறது என குற்றம் சாட்டினார்.

Newsletter

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...