தைப்பூச தேர்த்திருவிழாவை முன்னிட்டு சிவன்மலை முருகன் கோவிலில் இன்று மாலை தேரோட்டம்

சிவன்மலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, அதிகாலை 4 மணிக்கு மகா அபிஷேகத்திற்கு பிறகு காலை 7.30 மணிக்கு மகர புஷ்ய நல்வேளையில் சுப்பிரமணியர் வள்ளி தெய்வானையுடன் சுவாமி ரதத்திற்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்துள்ள சிவன்மலையில் உள்ள முருகன் கோயில் தைப்பூச தேர்த் திரு விழாவில் இன்று மாலை தேரோட்டம் நடைபெறவுள்ளது. சுப்பிரமணியர் ரதத்திற்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சிவன்மலை சுப்ரமணியசாமி கோயிலில் தைப்பூசத் தேர்த் திருவிழா மலை அடிவராத்தில் உள்ள வீரகாளியம்மன் கோயில் கொடியேற்றத்துடன் கடந்த 17-ம் தேதி தொடங்கியது.

தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், தேர்த் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட நிகழ்ச்சி இன்று மாலை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு, அதிகாலை 4 மணிக்கு மகா அபிஷேகத்திற்கு பிறகு காலை 7.30 மணிக்கு மகர புஷ்ய நல்வேளையில் சுப்பிரமணியர் வள்ளி தெய்வானையுடன் சுவாமி ரதத்திற்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.



இன்று மாலை 4 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி துவங்குகிறது. தை பூசம் தேர் திருவிழாவின் ஏற்பாடுகளை, இந்தசமய அறநிலையத்துறையினர் செய்துவருகின்றனர். ஏராளமானம் பொதுமக்கள் தேரை வடம் பிடித்து இழுக்க ஆவலுடன் உள்ளனர். இந்த மூன்று நாட்களும் அன்னதானம், பக்தி சொற்பொழிவு, கம்பத்தட்டம், வள்ளி கும்மி ஆட்டம் நிகழ்சிகள் நடைபெறுகிறது.

பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் காவடி எடுத்து வந்து நேர்த்தி கடன் செலுத்துவார்கள். திருத்தேர் 3 தினங்கள் மலையை வலம் வந்து, ஞாயிறுக்கிழமை தேர்நிலை அடைகிறது. மேலும் தமிழகம் முழுவதிலுமே நேற்று தைப்பூசவிழா துவங்கிய நிலையில் சிவன்மலையில் மட்டுமே இன்று துவங்குகின்றது என்பது கூடுதல் சிறப்பு.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...