பெரியகவுண்டனூரில் பிளாஸ்டிக், டயர் கழிவுகளை எரிப்பதால் நிலத்தடி தண்ணீர் மாசடைவதாக விவசாயிகள் புகார்

விளை நிலங்களுக்கு நடுவில் கழிவுகளை கொட்டி எரித்து வரும் தனியார் நிறுவனத்தின் மீது ஊராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள பெரியகவுண்டனூர் பகுதியில் விளை நிலங்களுக்கு நடுவில் தனியார் நிறுவனம் ஒன்று பிளாஸ்டிக் மற்றும் டயர் கழிவுகளை குவியலாக கொட்டி வைத்து ஒரு வகையான அமிலத்தை கொண்டு எரித்து சாம்பலாக்கி அதை விற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த கழிவுகள் எரிக்கப்படும் போது ஏற்படும் புகையால் அதைச் சுற்றியுள்ள தென்னை மரங்கள் பாதிக்கப்படுவதோடும், அமிலங்களை ஊற்றி கழிவுகளை எரித்து வருவதால் மண்ணின் சத்துத்தன்மை குறைந்து வருவதோடு நிலத்தடி நீரும் மாசடைந்து வருவதாக அப்பகுதி விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.



மேலும் அங்குள்ள ஆழ்துளை கிணறு மூலம் வரும் தண்ணீர் மாசடைந்து துர்நாற்றத்துடன் இருப்பதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டினர். இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் பொள்ளாச்சி சார் ஆட்சியரிடம் புகார் தெரிவித்ததையடுத்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அதிரடியாக அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது கழிவுகளைக் கொட்டி எரித்து வருவதற்கு மாசுக்கட்டுபாடு வாரியத்தில் அனுமதி வாங்கப்பட்டதா என்று அந்நிறுவன ஊழியரிடம் மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். மேலும் அந்த நிறுவனத்தைச் சுற்றியுள்ள ஆழ்துளை கிணறில் இருந்து மாசடைந்து வரும் தண்ணீரையும் சோதனைக்காக எடுத்துச் சென்றனர்.

தொடர்ந்து இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்து வந்ததாகவும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் விரைந்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே விலை நிலங்களை காப்பாற்ற முடியும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...