வாணவராயர் வேளாண்மை கல்லூரியில் குடியரசு தின விழா கொண்டாட்டம்

வேளாண்மை பயிலும் மாணவர்கள் தொழில் திறமையை வளர்த்துக்கொண்டு, புது வகை வேளாண் சார்ந்த தொழில்களில் ஈடுபட வேண்டும் என்று குடியரசு தின விழா உரையில், வாணவராயர் வேளாண்மை கல்லூரியின் முதல்வர் கு.பிரபாகர் கேட்டு கொண்டார்.


கோவை: பொள்ளாச்சி ஆனைமலை வட்டம் வாணவராயர் வேளாண்மை கல்லூரியில் 75 வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடபட்டது. விழாவில் கல்லூரி தேசிய மாணவர் படை பொறுப்பாளர் விஜயகுமார் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் முனைவர் கு.பிரபாகர் தேசிய கொடியை ஏற்றி வைத்து தேசிய மாணவர் படை மற்றும் மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார்.

அவர் தனது குடியரசு தின விழா உரையில், வேளாண்மை பயிலும் மாணவர்கள் தொழில் திறமையை வளர்த்துக்கொண்டு, புது வகை வேளாண் சார்ந்த தொழில்களில் ஈடுபட கேட்டு கொண்டார்.



தேசிய மாணவர் படையின் ராணுவம் சார்ந்த நிகழ்ச்சி, மாணவர்களின் பிரமிட் அனைவரையும் கவர்ந்தது. பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் மாவட்ட அளவில் தேசிய வாக்காளர் விழிப்புணர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கி கல்லூரி முதல்வர் முனைவர் கு.பிரபாகர் மற்றும் இயக்குனர் முனைவர் கெம்புசெட்டி கவரவித்தனர். இந்த நிகழ்ச்சிகளை மாணவ மன்ற அலுவலர் ரவிக்குமார் ஒருங்கிணைப்பில் மாணவ மன்ற பொறுப்பாளர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்தனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...