திருமணம் செய்ய தடை விதித்த அண்ணனை கொன்ற தங்கை கைது

கோவை செல்வபுரத்தை அடுத்த கல்லாமேடு பகுதியை சேர்ந்தவர் ரேணுகா. இவருக்கு செல்வராஜ் (32) என்ற மகனும், நாகலட்சுமி (23) என்ற மகளும் உள்ளனர். செல்வராஜ் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் வீட்டில் படுத்த படுக்கையாக இருந்தார். குடும்ப சூழலை கருத்தில் கொண்டு ரேணுகா வேலைக்கு சென்று வந்தார்.

நாகலட்சுமி ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர். இந்த நிலையில், நாகலட்சுமி மீண்டும் திருமணம் செய்ய போவதாக செல்வராஜிடம் கூறியதாக தெரிகிறது. இதை செல்வராஜ் எதிர்த்துள்ளார். இதனால் அண்ணன் தங்கை இடையே கடந்த சில தினங்களாக வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.

இன்று காலை வழக்கம் போல ரேணுகா வேலைக்கு சென்றுவிட அண்ணன்- தங்கைக்கு இடையே வாக்குவாதம் அதிகரித்தது. இதனால் ஆத்திரம் அடைந்த நாகலட்சுமி, அவரது அண்ணன் செல்வராஜின் மார்பில் மிதித்துள்ளார். வலியால் துடித்த செல்வராஜின் குரலை கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். இந்நிலையில், செல்வராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுதொடர்பாக, செல்வபுரம் போலீசாருக்கு அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் செல்வராஜின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிச்தனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, நாகலட்சுமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...