சிவன்மலையில் கிராம சபை கூட்டத்தில் தனியார் மாமிசம் பதப்படுத்தும் நிறுவனத்திற்கு தடை விதிக்க தீர்மானம்


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த சிவன்மலை ஊராட்சி மன்றம் சார்பில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் புதிய சாலை வசதிகள் கேட்டும் புகார் மனுக்களை பொதுமக்கள் கொடுத்தனர்.

மேலும் மாமிசம் பதப்படுத்தும் தொழிற்சாலை துவங்குவதை உடனடியாக தடைவிதிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கிராமசபை கூட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். சிவன்மலை ஊராட்சி மன்ற தலைவர் துரைசாமி தலைமையில், துணைத்தலைவர் சண்முகம் முன்னிலையில் இந்த கூட்டமானது நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் புதிய சாலை வசதிகள் கேட்டு புகார் மனுக்களை பொதுமக்கள் கொடுத்தனர். மேலும் சிவன்மலை கிராமம் ஜே.ஜே நகர் அருகில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் மாமிச தொழிற்சாலை தொடங்க உள்ளதாகவும், அதற்கு தடை விதிக்க கோரி மனுக்களை ஊர் பொதுமக்கள் வழங்கினர்.

சர்வே எண் 96/1 என்ற இடத்தில் SAKS & காவியாஸ் அக்ரோ பிராசசஸ் இண்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனம் கறிக்கோழி காடை, மீன், ஆடு போன்ற பறவை விலங்குகளின் மாமிசத்தை சுத்தம் செய்து பதப்படுத்தி ஏற்றுமதி செய்வதற்காக கட்டுமான பணிகளை செய்து வருகிறார்கள்.

மேற்படி தொழிற்சாலை செயல்பட்டால் கடுமையான சுகாதார கேடு ஏற்படும் கொசு, ஈ போன்ற தொல்லைகள் அதிகமாகும், மேலும் பறவை மற்றும் கால்நடைகளை சுத்தம் செய்யும் போது அதன் அசுத்த நீரை நேரடியாக பூமியில் விடுமாறு தொட்டி அமைத்துள்ளனர்.

இதனால் அருகில் உள்ள விவசாய கிணறுகள் மற்றும் ஊராட்சி குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படும் என்கின்றனர். மேலும் இது போன்ற தொழில் மக்கள் குடியிருப்பு பகுதி மற்றும் விவசாய நிலங்களுக்கு அருகில் செயல்பட அரசு சட்டவிதிகளின்படி அனுமதி இல்லை என புகார் அளித்தனர்.

மேலும் பாமாயிலுக்கு பதிலாக நியாய விலை கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும். காங்கேயம் நகராட்சி ஆனது முதல் நிலை நகராட்சியாக தேர்வு செய்யப்பட்டு அதை விரிவு படுத்தும் பணி நடைபெற்று வருவதாகவும், நகராட்சியுடன் சிவன்மலை இணைப்பதாக சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும், சிவன்மலைப் பகுதியானது கிராமங்களை உள்ளடக்கியது ஆகும்.

கிராம ஊராட்சிகளிலே சிறப்பான ஊராட்சி என அதிகாரிகள் பாராட்டிவருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசு வழங்கும் தேசிய உறுதித் திட்டம் விவசாயிகளுக்கு கிடைக்கும் மானியம் ஆகியவைகள் கிடைக்காமலும் போகும். 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் நகராட்சியுடன் இணைத்தால் தடைப்பட்டுவிடும் எனவும் நகராட்சியுடன் இணைக்க கூடாது என புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து கிராம சபை கூட்டத்தில் இந்த மூன்று தீர்மானங்கள் உட்பட மொத்தம் 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த கிராம சபை கூட்டத்திற்கு ஊரக உதவி இயக்குனர் (தணிக்கை) வி.ஜெகதீசன், ஆணையாளர் விமலாதேவி, மண்டலா துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராமச்சந்திரன், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Newsletter

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...