கோவையில் நடைபெற்றுவரும் 31வது தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி.

கோவையில் நடைபெற்றுவரும் 31வது தேசிய அளவிலான ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் பங்கேற்கும் தேசிய சாம்பியன் கூடைப்பந்து போட்டிகள் கோவை பி.எஸ்.ஜி. உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது மூன்றாம் நாள்  போட்டியில் ஆண்கள் முதல் போட்டியில் கொச்சி, சுங்கம் மற்றும் மத்திய கலால் அணியை எதிர்த்து பெங்களூரு, ஆர்மி சர்வீசஸ் கார்ப்ஸ் அண்டு சென்டர் அணி விளையாடியது. 

இதில் ஆர்மி சர்வீசஸ் கார்ப்ஸ் அண்டு சென்டர் அணி 73 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றது. எதிர்த்து விளையாடிய சுங்கம் மற்றும் மத்திய கலால் அணி 46 புள்ளிகள் பெற்றது. இதில் ஆர்மி சர்வீசஸ் கார்ப் அண்டு சென்டர் அணியின் வீரர்கள் இசாக் டி. தாமஸ் 18 புள்ளிகளும், ஜிதாந்தர் சிங் 8 புள்ளிகளும் பெற்றனர். சுங்கம் மற்றும் மத்திய கலால் அணியின் வீரர்கள் எட்ரிக் 9 புள்ளிகளும், போனி 9 புள்ளிகளும் பெற்றனர். 


இரண்டாவது போட்டியில் இந்தியன் ஏர்போர்ஸ் அணியை எதிர்த்து லூதியான கூடைப்பந்து அகாடமி அணி விளையாடியது. இதில் இந்தியன் ஏர்போர்ஸ் அணி 95 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றது, இதன் வீரர்கள் ஜி.நரேந்தர் 26 புள்ளிகள், ஹேமந்த் செரோன் 23 புள்ளிகளும் பெற்றனர். எதிர்த்து விளையாடிய லூதியான கூடைப்பந்து அகாடமி அணி 80 புள்ளிகள் பெற்றது. இதன் வீரர்கள் அர்ஷ்பிரீத் சிங் 24 புள்ளிகள், ஜெய்பால் சிங் 22 புள்ளிகள் பெற்றனர்.


மூன்றாவது போட்டியில் மத்திய இரயில்வே அணியை எதிர்த்து குஜராத், வருமான வரி அணி விளையாடியது. இதில் மத்திய இரயில்வே அணி 68 புள்ளிகள் பெற்றது. இதன் வீரர்கள் ராகேஷ் 16 புள்ளிகளும், அமித் 15 புள்ளிகளும் எடுத்தனர். எதிர்த்து விளையாடிய வருமான வரி அணி 63 புள்ளிகள் பெற்றது. இதன் வீரர்கள் டிஷாந்த் 23 புள்ளிகளும், காசி 21 புள்ளிகளும் எடுத்தனர். 


நான்காவது போட்டியில் டெக்ராடூன், ஓஎன்ஜிசி அணியை எதிர்த்து சென்னை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி விளையாடியது. இதில் ஓஎன்ஜிசி அணி 73 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றது. எதிர்த்து விளையாடிய இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி 56 புள்ளிகள் பெற்றது. 




பெண்கள் முதல் போட்டியில் தென்னக இரயில்வே அணியை எதிர்த்து பஞ்சாப் அணி விளையாடியது. இதில் தென்னக இரயில்வே அணி 65 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றது. எதிர்த்து விளையாடிய பஞ்சாப் அணி 52 புள்ளிகள் பெற்றது. இதில் தென்னக இரயில்வே அணியின் ராஜா பிரியா 15 புள்ளிகளும், அமிதா மின்ஜ் 14 புள்ளிகளும் எடுத்தனர். பஞ்சப் அணியின் ககன்தீப் கவுர் 16 புள்ளிகளும், அமன்பிரீத் கவுர் 14 புள்ளிகளும் பெற்றனர்.


இரண்டாவது போட்டியில் மேற்கு வங்க அணியை எதிர்த்து டெல்லி அணி விளையாடியது. இதில் மேற்கு வங்கம் அணி 79 புள்ளிகள் பெற்றது. இதன் வீராங்கனைகள் சீதாமணிடுடு 19 புள்ளிகளும், அன்ஜனா 15 புள்ளிகளும் பெற்றனர். எதிர்த்து விளையாடிய டெல்லி அணி 50 புள்ளிகள் பெற்றது. இதன் வீராங்களைகள் ஷாகிபா மற்றும் பிரின்சி ஆகியோர் 11 புள்ளிகள் பெற்றனர்.


மூன்றாவது போட்டியில் கேரளா அணியை எதிர்த்து தமிழ்நாடு அணி விளையாடியது. இதில் கேரளா அணி 73 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றது. இதன் வீராங்கனைகள் பி. ஆஞ்சனா 26 புள்ளிகளும், பி.சூர்யா 12 புள்ளிகளும் எடுத்தனர்.  எதிர்த்து விளையாடிய தமிழக அணி 61 புள்ளிகள் பெற்றது. இதன் வீராங்கனைகள் ஆர்.வர்சனா 21 புள்ளிகளும், எஸ்.ஸ்ரீவித்யா 13 புள்ளிகளும் பெற்றனர்.


நான்காவது போட்டியில் தெலுங்கான அணியை எதிர்த்து சத்தீஸ்கர் அணி விளையாடியது. இதில் சத்தீஸ்கர் அணி 86 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றது. எதிர்த்து விளையாடிய தெலுங்கான அணி 79 புள்ளிகள் பெற்றது.


நாளை நடைபெறும்  அரையிறுதி போட்டியில் ஆண்கள் பிரிவில் ஆர்மி சர்வீசஸ் கார்ப்ஸ் அண்டு சென்டர் அணியை எதிர்த்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி விளையாடுகிறது.மற்றொரு போட்டியில் இந்தியன் ஏர்போர்ஸ் அணியை எதிர்த்து ஓஎன்ஜிசி அணி விளையாடுகிறது
பெண்கள் பிரிவில் தென்னக இரயில்வே அணியை எதிர்த்து தமிழ்நாடு அணியும் மேற்கு வங்க அணியை எதிர்த்து சத்தீஸ்கர் அணியும் விளையாடுகின்றன.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...