ஆழியார் வால்பாறை சாலையில் காரை இரண்டு நிமிடம் 40 நொடிகளில் 220 மீட்டர் தூரம் இழுத்துச் சென்று ஏழு வயது சிறுவன் சாதனை

நன்கு பயிற்சி பெற்று, மருத்துவரின் உடற்தகுதி சான்றிதழ் பெற்ற சிறுவன் தேவசுகன், இன்று உலக சாதனை படைக்கும் விதமாக பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் வால்பாறை சாலையில் 900கிலோ எடையுள்ள காரை இழுக்கும் உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது.


கோவை: சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது மனைவி மாரீஸ்வரி. இவர்களது மகனான தேவசுகன்(வயது7). 5ம் வகுப்பு படித்து வரும் தேவசுகனுக்கு சிறு வயதில் இருந்தே சாதனை படைக்கும் வகையில் சிறுவனின் பெற்றோர்கள் காரை இழுக்கும் வகையில் பயிற்சி அளித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் நன்கு பயிற்சி பெற்று, மருத்துவரின் உடற்தகுதி சான்றிதழ் பெற்ற சிறுவன் தேவசுகன், இன்று உலக சாதனை படைக்கும் விதமாக பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் வால்பாறை சாலையில் 900கிலோ எடையுள்ள காரை இழுக்கும் உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது.



காரின் முன்புறம் கயிறு கட்டபட்டு 2 நிமிடம் 40 வினாடிகளில் 220மீட்டர் தூரம் இழுத்து சென்று சிறுவன் தேவசுதன் உலக சாதனை படைத்தார். சிறுவனின் இந்த உலக சாதனை சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது.

இதற்கான சான்றிதழ் மற்றும் பதக்கமும் சோழன் உலக சாதனை நிறுவன அதிகாரிகள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர். சிறுவன் காரை இழுத்து சென்ற போது அங்கிருந்த பார்வையார்கள் கைதட்டி உற்சாகபடுத்தியதோடு பாராட்டும் தெரிவித்தனர்.



ஏற்கனவே இந்த சிறுவன் மதுரையில் 200மீட்டர் தூரம் காணை இழுத்து சென்று சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...