பொள்ளாச்சியில் மருத்துவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம்

தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காக பாடுபடுவோம் என்றும், முடி திருத்தும் தொழிலாளர்கள், சலவை தொழிலாளர்களின் உரிமையை மீட்டெடுக்க பாடுபவோம் என்றும் அனைத்து மருத்துவர் மக்கள் முன்னேற்ற கழக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


கோவை: அனைத்து மருத்துவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் பொள்ளாச்சி தாலுகா வங்கி ஊழியர்கள் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது.



கோவை மாவட்ட தலைவர் கணேசன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கோவை, ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



மாநில தலைவர் ரமேஷ் ஐயா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.



தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்கான அனைத்து மருத்துவர் மக்கள் முன்னேற்ற கழகம் பாடுபடும், முடி திருத்தும் தொழிலாளர்கள், சலவை தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏனைய தொழில் புரிபவர்களின் உரிமையை மீட்டெடுக்கவும் அரசிடமிருந்து சலுகைகள் பெற்றுத் தரவும் அனைத்து மருத்துவர் மக்கள் முன்னேற்ற கழகம் பாடுபடும், தமிழகத்தில் ஜாதி வாரிய கணக்கெடுப்பை நடத்தி உள் இட ஒதுக்கீடு 5 சதவீதம் வழங்க வேண்டும், மருத்துவ சமூக மக்களைப் பிற சமூக மக்கள் வன்கொடுமை தாக்குதல், கொலை செய்தல் மற்றும் பெண்களை இழிவு படுத்துதல் போன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், திரைப்படங்களில் முடிதிருத்தும் தொழிலாளர்களை இழிவுபடுத்தும் வகையில் சித்தரிப்பதை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...