சிவன்மலையில் தேர்த்திருவிழாவின் 12ம்‌ நாள்‌ தெப்ப உற்சவ நிகழ்வு – திரளான பக்தர்கள் பங்கேற்பு

சிவன்மலையில், உற்சவருக்கு நான்கு கால சிறப்பு பூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது. உற்சவர் தெப்பக் குளத்தில் நீராடும் நிகழ்வு நடைபெற்றது. இதனை அடுத்து சிவன்மலை செங்குந்த முதலியார் சமூகத்தினர் சார்பில் 12 ஆம் நாள் முறையை நடத்தினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள சிவன்மலையில் தைப்பூச தேர்த்திருவிழா கடந்த ஜனவரி 17ஆம் தேதி புதன்கிழமை துவங்கியது. இதனை தொடர்ந்து ஜனவரி 26ம் தேதி முதல் ஜனவரி 28ம் தேதி வரை சிவன்மலை தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்து 3 நாட்கள் தேரோட்டத்தை சிறப்பித்தனர்.

இதனை அடுத்து மூன்றாம் நாள் தேரோட்டம் முடிந்ததும், இரவு சுமார் 7 மணி அளவில் தேரிலிருந்து உற்சவர் சுப்பிரமணிய சுவாமி நஞ்சுண்டேஸ்வரர் கோவில் சன்னதிக்கு எழுந்தருளினார். பின்னர் உற்சவருக்கு மகா தீபாராதனைகள் நடைபெற்று வடம் பிடித்த மற்றும் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம்‌ வழங்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று உற்சவருக்கு நான்கு கால சிறப்பு பூஜைகளும் அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது. உற்சவர் தெப்பக் குளத்தில் நீராடும் நிகழ்வு நடைபெற்றது. இதனை அடுத்து சிவன்மலை செங்குந்த முதலியார் சமூகத்தினர் சார்பில் 12 ஆம் நாள் முறையை நடத்தினர்.

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நான்கு கால சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். மேலும் 13ஆம் நாள்‌ நிகழ்வாக நாளை வியாழக்கிழமை மதியம் 12 மணி அளவில் மஹா தரிசனம் நடைபெற உள்ளது‌. பக்தர்கள் அனைவரும் இப்பூஜையில் கலந்து கொண்டு சுப்பிரமணிய சுவாமி அருள் பெற வேண்டும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Newsletter

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...