பல்லடத்தில் பத்திரிகையாளர் நேசபிரபு கொலை முயற்சி வழக்கில் ஒருவர் சரண்

செய்தியாளர் வெட்டப்பட்டது தொடர்பாக, பிரவீன், சரவணன், பாலபாரதி, ஹரிகரன், ஜெயபிரவீன், முகமது சபி ஆகியோர் கைது செய்யப்பட்டன். மேலும் இதில், தொடர்புடைய சிலரை போலீசார் தேடி வந்த நிலையில், பல்லடத்தை சேர்ந்த அன்பு கிருபாகரன் என்பவர் கோவை ஜே.எம்:7, கோர்ட்டில் நேற்று (பிப்.1) சரணடைந்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளராக பணியாற்றி வருபவர் நேச பிரபு. சட்ட விரோதமாக பார் நடத்தியது தொடர்பாக செய்தி வெளியிட்டதால், கடந்த 24ம் தேதி, மர்ம கும்பல் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச்சென்றது.

படுகாயமடைந்த நேச பிரபுவுக்கு, கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து, தனிப்படை அமைத்து கும்பலை தேடி வந்தனர். இச்சம்பவம் தொடர்பாக, பிரவீன், சரவணன், பாலபாரதி, ஹரிகரன், ஜெயபிரவீன், முகமது சபி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் தொடர்புடைய சிலரை போலீசார் தேடி வந்த நிலையில், பல்லடத்தை சேர்ந்த அன்பு கிருபாகரன் 20, கோவை ஜே.எம்:7, கோர்ட்டில் நேற்று (பிப்.1) சரணடைந்தார்.

அவரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டதை தொடர்ந்து, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...