மூன்றாவது அத்திக்கடவு குடிநீர் குழாய் திட்டம்-குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ஆய்வு

மூன்றாவது அத்திக்கடவு குடிநீர் குழாயிலிருந்து, பரிசோதனை முறையில் குடிநீர் 1-வது வார்டு நகர் மேல்நிலைத் தொட்டிக்கு வந்தடைந்தது. இதனை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் வார்டு கவுன்சிலர் கற்பகம் ராஜசேகரன் ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கோவை மக்களின் கனவு திட்டமான 3-வது அத்திகடவு திட்டத்திற்கான பிரதான குழாய் அமைக்கும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று முடிந்த நிலையில் 1-வது வார்டு வழியாக சுமார் 3-கி.மீட்டர் தூரத்திற்கு பிரதான குழாய் கடந்த 1-வருடத்திற்கு மேலாக அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.



இந்த நிலையில் இன்று (பிப்.2) பரிசோதனை முறையில் குடிநீர் 1-வது வார்டு வளர்மதி நகர் மேல்நிலைத் தொட்டிக்கு வந்தடைந்தது. இதனை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் வார்டு கவுன்சிலர் கற்பகம் ராஜசேகரன் ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிகழ்வில் குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் செந்தில், உதவி செயற் பொறியாளர் பட்டான், உதவி பொறியாளர்கள் ஞானமூர்த்தி, நந்தகுமார் மற்றும் மாநகராட்சி உதவி செயற் பொறியாளர் எழில், உதவி பொறியாளர் ஜெயின்ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் உடன் இருந்தனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...