பொள்ளாச்சியில் நடந்து சென்ற பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட தலைமை காவலர் கைது

பெண்களிடம் நகைப்பறிப்பில் ஈடுபட்ட தலைமை காவலர் சபரிகிரியை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து தங்க நகை மற்றும் வழிப்பறிக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். கடன் அதிகமாக இருந்ததால் நகை பறிப்பில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட சபரிகிரி வாக்குமூலம் அளித்துள்ளார்.


கோவை: பொள்ளாச்சி உடுமலை சாலை பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த சென்ற இரண்டு பெண்களிடம் மர்ம நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்து நகை பறித்து சென்ற சம்பவம் குறித்து பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து மர்ம நபரை தேடி வந்தனர்.



அப்போது சம்பவம் நடந்த இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை தனிப்படை போலீசார் ஆய்வு செய்தபோது பொள்ளாச்சி மாக்கினாம்பட்டி பகுதியை சேர்ந்த சபரிகிரி(41) என்வர் நகை பறிப்பில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இவர் கோவை செட்டிபாளையம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து தற்போது தனிப்பிரிவு போலீசுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.



இதையடுத்து தலைமை காவலர் சபரிகிரியை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த தங்க நகை மற்றும் வழிப்பறிக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட சபரிகிரியை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். கடன் அதிகமாக இருந்ததால் இதுபோன்ற நகை பறிப்பில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட சபரிகிரி வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்தநிலையில் கோவை மற்றும் பொள்ளாச்சி பகுதியில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற நகை பறிப்பு சம்பவங்களில் இவருக்கு தொடர்பு இருக்கிறதா என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...