இனிமேல் முன்னாள் மாணவர்கள் என்று அழைக்க வேண்டாம் - அன்னூரில் நடைபெற்ற பள்ளி விழாவில் முன்னாள் தலைமை செயலாளர் இறையன்பு பேச்சு

வகுப்பறைகள் சீரமைத்தல், அறிவியல் ஆய்வுக்கூடம், புதிய ஆய்வுக்கூட கட்டிடம், ஸ்மார்ட் வகுப்பறை, நூலக கட்டிடம் புதுப்பித்தல், 73 கண்காணிப்பு கேமரா அமைத்தல் என சுமார் ரூ.2 கோடியில் பணிகள் செய்யப்பட்டுள்ளன.


கோவை: கோவை அன்னூரில் 73 ஆண்டுகள் பழமையான அமரர் முத்துக்கவுண்டர் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 1000 த்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் பலர் முன்னணி மருத்துவமனையில் தலைவர்களாகவும், டெல்லியில் மத்திய அரசின் உயர் பதவிகளிலும், வெளிநாடுகளிலும் பணிபுரிகின்றனர்.

இந்த நிலையில் தற்போது உள்ள தலைமை ஆசிரியை சித்ரா முயற்சியில் இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் பலரை ஒன்றிணைத்து பள்ளி நிர்வாகத்தின் ஒத்துழைப்போடு பல பணிகளைக் கடந்த ஆண்டு துவக்கி மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் வகுப்பறைகள் சீரமைத்தல், அறிவியல் ஆய்வுக்கூடம், புதிய ஆய்வுக்கூட கட்டிடம், ஸ்மார்ட் வகுப்பறை, நூலக கட்டிடம் புதுப்பித்தல், 73 கண்காணிப்பு கேமரா அமைத்தல், 20 வகுப்புகளுக்கு மின் விளக்கு மற்றும் மின்விசிறி அமைத்தல், மாணவர்களின் இருக்கைகளை புதுப்பித்தல், 35 வகுப்பறைகளுக்கு மேஜைகள் அளித்தல், தையல் பயிற்சி அளித்தல், கூடைப்பந்து மைதானம் சீரமைத்தல், கழிப்பறை அமைத்தல், கழிப்பறைகளை தூய்மையாக பராமரித்தல், இரவு காவலர் நியமித்தல் ஆகிய பணிகளை 2 கோடி ரூபாய் செலவில் செய்துள்ளனர்.



இந்த பணிகளை பள்ளிக்கு அர்ப்பணிக்கும் விதமாக முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு சிறப்பு விருந்தினராக பங்கேற்று ரிப்பன் வெட்டி பொருட்களை பள்ளிக்கு அர்ப்பணித்தார். தொடர்ந்து நடைபெற்ற விழாவில் மாணவர்களிடையே பேசிய இறையன்பு ஐஏஎஸ், இனி முன்னாள் மாணவர்களை அவ்வாறு அழைக்க வேண்டாம், அவர்களை என்றும் மாணவர்கள் என்று அழையுங்கள் என்று கூறினார்.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...