கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு குறிஞ்சேரி ஊராட்சியில் முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு முகாம்

குடும்ப அட்டை, வருமானச் சான்றிதழ், குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை நகல்கள், மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான ஆவணம் உள்ளிட்டவற்றை கொடுத்து முதல்மைச்சரின் மருத்துவ காப்பீட்டு முகாமில் பொதுமக்கள் பதிவு செய்து கொண்டனர்.


திருப்பூர்: தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த குறிஞ்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு முகாம் நடைபெற்றது.



அப்போது பொதுமக்கள் குடும்ப அட்டை, வருமானச் சான்றிதழ், குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை நகல்கள், மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான ஆவணம் உள்ளிட்டவற்றை கொடுத்து பதிவு செய்து கொண்டனர்.



இந்த முகாமில் புதிதாக காப்பீட்டு அட்டை பதிவு செய்பவர்கள், ஏற்கனவே உள்ள மருத்துவ காப்பீட்டு அட்டை புதுப்பித்து கொடுத்தல், காப்பிட்டு அட்டை தவறவிட்டவர்கள், புதிய அட்டை பெறுதல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றது.



இந்த முகாமில் வருவாய்துறை மூலம் வருமானச் சான்றிதழ் உடனடியாக வழங்கப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். முகாமில் ஒன்றிய குழு தலைவர் மகாலட்சுமி முருகன், உடுமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.கே.எம்.தங்கராஜ் என்ற மெய்ஞானமூர்த்தி உட்பட ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை வடக்கு-பீளமேடு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணி வைத்த இருவர் கைது

கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த வழக்கில் ரயில்வே பாதுகாப்புப்...

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (52) தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததோடு, 4 கிலோ கஞ்சா வ...

பொள்ளாச்சி ஆழியாறு பகுதியில் மது போதையில் தள்ளி இளைஞர் கொலை - குற்றவாளி கைது

பொள்ளாச்சி வட்டம் ஆழியாறு நெல்லித்துறை பகுதியில் குடும்ப பூசல் காரணமாக மது போதையில் வந்த ஆனந்த் என்பவர் பாலகிருஷ்ணனை தள்...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்பு தோன்றி பரபரப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் அறையில் நேற்று எதிர்பாராதவிதமாக பாம்பு ஒன்று தோன்றியதால் பரபரப்...

மூளைச்சாவடைந்த இளைஞரின் உறுப்பு தானம் மூவருக்கு புதுவாழ்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள வெஞ்சமடை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் கருப்புசாமி மே 10ஆம் தேதி இருசக்...

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...