திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியிருப்போர் நலச் சங்கத்தினர் போராட்டம்

வங்கியில் பணம் செலுத்த உரிய ஆவணங்களை சமர்ப்பித்தும், பட்டா வழங்குவதில் அதிகாரிகள் காலதாமதம் செய்து வருவதாகவும், தொடர்ந்து இது குறித்து பலமுறை மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுபிறகும் கண்டுகொள்ளவில்லை என குடியிருப்போர் நலச் சங்கத்தினர் புகார் தெரிவித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி 55வது வார்டுக்குட்பட்ட பட்டுக்கோட்டையார் நகர் பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 33 ஆண்டுகளுக்கு மேலாக வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பட்டா கேட்டு பல கட்ட போராட்டங்கள் நடத்தியதன் விளைவாக கடந்த 1999 ஆம் ஆண்டு குடியிருப்புகளுக்கு பட்டா வழங்க அரசாணை வெளியிடப்பட்டது.

ஆனால் அதனை எதிர்த்து நபர் ஒருவர் தொடர்ந்து வழக்கின் காரணமாக பட்டா வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. பிறகு வசிக்கும் பொது மக்கள் அரசு நிர்வாகம் உள்ளிட்ட சம்பந்தப்பட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வழக்கை திரும்ப பெற்றுக் கொண்ட நிலையில் மாவட்ட நிர்வாகம் அரசு நிர்ணயித்த கிரைய தொகையை செலுத்தி பட்டா பெற்றுக்கொள்ள வலியுறுத்தியது.



இதற்காக வங்கியில் பணம் செலுத்த உரிய ஆவணங்களை சமர்ப்பித்தும் பட்டா வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டு வருவதாகவும், தொடர்ந்து இது குறித்து பலமுறை மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுபிறகும் காலதாமதம் செய்யப்படுவதாக கூறி உடனடியாக இதற்கு தீர்வு காண வேண்டுமென வலியுறுத்தி பட்டுக்கோட்டையார் நகர் குடியிருப்போர் நலச் சங்கத்தை சேர்ந்த பெண்கள் உட்பட பொதுமக்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுக்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட ஆட்சியர் தங்களை நேரடியாக சந்தித்து பிரச்சனைக்கு தீர்வு காணும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...