சிறுகலந்தையில் தென்னை டானிக் பற்றிய செயல்முறை விளக்கம் அளித்த அமிர்தா வேளாண் கல்லூரி மாணவர்கள்

வேளாண் கல்லூரி மாணவர்கள் வேரில் TNAU தென்னை டானிக் கட்டுவது எப்படி என்பது பற்றியும் அதன் பயன்கள் குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்து விளக்கினர். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.


கோவை: அரசம்பாளையம் அமிர்தா வேளாண்மை கல்லூரியில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவ, மாணவிகள், ஊரக வேளாண்மை செயல்முறை பயிற்சி அனுபவ திட்டத்தின் (RAWE) கீழ் பல்வேறு விவசாய செயல்முறை விளக்கங்களை கிராம மக்களுக்கு அளித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சிறுகலந்தையில், தென்னை வேரில் TNAU தென்னை டானிக் கட்டுவது பற்றிய செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

விவசாயம் செய்வதற்கு தண்ணீர் பற்றாக்குறை இருக்கும் நிலையில் தென்னைக்கு உரம் போட்டு பராமரிப்பது சவாலாக உள்ளது. இதற்கு ஒரு சிறந்த தீர்வுதான் வேரில் TNAU தென்னை டானிக் கட்டுவது. இதை வருடத்திற்கு இருமுறை, ஆறு மாத இடைவெளியில் செய்து வருகையில், குரும்பை உதிர்வதை கட்டுப்படுத்தி அதிக காய்களைப் பெறலாம். இதனால் 20 சதவீதம் வரை மகசூலை அதிகரிக்கலாம். இந்நிகழ்வில் வேளாண் கல்லூரி மாணவர்கள் வேரில் TNAU தென்னை டானிக் கட்டுவது எப்படி என்பது பற்றியும் அதன் பயன்கள் குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்து விளக்கினர்.



வேளாண் கல்லூரி மாணவர்களால் நடத்தப்பட்ட இந்நிகழ்வில் விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர். இந்நிகழ்வு வெற்றிபெற அமிர்தா வேளாண்மை கல்லூரியின் முதல்வர் முனைவர் சுதீஷ் மணலில் மற்றும் குழு வழிகாட்டுனர்கள் முனைவர் சிவ சபரி, முனைவர் நவீன் குமார், முனைவர் யசோதா, முனைவர் கார்த்திக் ராஜா ஆகியோர் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தனர்.

Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...