சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு உடுமலையில் கார்கள் மூலம் விழிப்புணர்வு ஊர்வலம்

பேரணி தளிரோடு வழியாக சென்று பழைய பஸ்நிலையம், புதிய பஸ்நிலையம் ரவுண்டனா வழியாக ராஜேந்திராசாலை, கபூர் கான்வீதி, ரயில்வே மேம்பாலம், தளிரோடு உட்பட முக்கிய சாலைகள் வழியாக சென்று எலையமுத்தூர் சாலையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறைவு பெற்றது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை போக்குவரத்துதுறை சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு காரில் சீட் பெல்ட் அணிந்து பயணிப்பது குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

குட்டை திடலில் தொடங்கிய இந்த பேரணியை உடுமலை ஆர்.டி.ஓ ஜஸ்வந்த் கண்ணன் கொடி அசைத்து தொடக்கி வைத்தார். இதையடுத்து பேரணி தளிரோடு வழியாக சென்று பழைய பஸ்நிலையம், புதிய பஸ்நிலையம் ரவுண்டனா வழியாக ராஜேந்திராசாலை,கபூர் கான்வீதி, ரயில்வே மேம்பாலம், தளிரோடு உட்பட முக்கிய சாலைகள் வழியாக சென்று எலையமுத்தூர் சாலையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறைவு பெற்றது.



ஊர்வலத்தின் போது காரில் செல்வோர் சீட் பெல்ட் அணிந்து சாலை விதிகளை முறையாக பின்பற்றி பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளுமாறு பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் சாலை போக்குவரத்தின் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. பேரணியில் வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன்,போக்குவரத்து ஆய்வாளர் ஜெயந்தி, ஓட்டுனர் பயிற்சி மையத்தைச் சேர்ந்த உரிமையாளர்கள், பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...