உடுமலை ஏரிப்பாளையத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் - 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

வருகின்ற பொள்ளாச்சி பாராளுமன்ற தேர்தலில் தேர்தலை எவ்வாறு எதிர்க் கொள்ள வேண்டும், காங்கிரஸ் கட்சியின் சாதனைகளை பொதுமக்களிடம் வீடுகளாக எடுத்து கூறி விழிப்புணர்வு செய்ய வேண்டும் என்று நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை ஏரிப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் உள்ள உடுமலை மற்றும் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் தென்னரசு தலைமையில் நடைபெற்றது.



வருகின்ற பொள்ளாச்சி பாராளுமன்ற தேர்தலில் தேர்தலை எவ்வாறு எதிர்க் கொள்ள வேண்டும், காங்கிரஸ் கட்சியின் சாதனைகளை பொதுமக்களிடம் வீடுகளாக எடுத்து கூறி விழிப்புணர்வு செய்ய வேண்டும் மற்றும் அனைத்து பிரிவு தலைவர்களும் ஒன்றிணைந்து பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் வெற்றிக்காக கடுமையாக உழைக்க வேண்டும் என திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் தென்னரசு மற்றும் தொகுதி பொறுப்பாளர் செந்தில்குமார் நிர்வாகிகளிடம் தெரிவித்தனர்.



தாராபுரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காளிமுத்து, மாநில செயற்குழு உறுப்பினர் கோவிந்தராஜ், மாவட்ட கவுன்சிலர் ஜனார்த்தனன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கிட்டு சாமி, கண்ணுச்சாமி, மாவட்ட துணை தலைவர் முத்துகுமார், மற்றும் உடுமலை நகர தலைவர் கோ.ரவி, வட்டாரத் தலைவர் வழக்கறிஞர் செல்வகுமார், சிறுபான்மை பிரிவு மஜீத் உட்பட அனைத்து துறை பிரிவு நிர்வாகிகள் மற்றும் 200க்கும் மேற்பட்டோர் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...