உடுமலை பிரதான சாலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் - நூற்றுக்கு மேற்பட்ட விளம்பர போர்டுகள் பறிமுதல்

நகர அமைப்பு அலுவலர் உதயகுமார் தலைமையில் ஆய்வாளர் செல்வம் மற்றும் நகராட்சி பணியாளர்கள் கச்சேரி வீதி, வ.ஊ.சி வீதி, சீனிவாச வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் சாக்கடைக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த விளம்பர போர்டுகள், கூரை தகடுகள், பந்தல்கள் மற்றும் அனுமதி பெறாத விற்பனை வண்டிகள் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சி பகுதியில் சீனிவாசா வீதி, பசுபதி வீதி, சத்திரம் வீதி, வ உ சி வீதி, கச்சேரி வீதி, வக்கீல் நாகராஜன், வெங்கட கிருஷ்ணா ரோடு, கல்பனா ரோடு மற்றும் ராஜேந்திர ரோடு ஆகிய பகுதிகளில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நகராட்சி ஆணையாளர் பெர்பெற்றி டெரன்ஸ் லியோன் தலைமையில், நகர மன்ற தலைவர் மத்தீன முன்னிலையில் அனைத்து துறை அதிகாரிகள் அடங்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.



அப்போது மேற்கண்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என முடிவு செய்யப்பட்டு ஆட்டோ மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிலையில் இன்று நகர அமைப்பு அலுவலர் உதயகுமார் தலைமையில் ஆய்வாளர் செல்வம் மற்றும் நகராட்சி பணியாளர்கள் கச்சேரி வீதி, வ.ஊ.சி வீதி, சீனிவாச வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் சாக்கடைக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த விளம்பர போர்டுகள், கூரை தகடுகள், பந்தல்கள் மற்றும் அனுமதி பெறாத விற்பனை வண்டிகள் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது நூற்றுக்கு மேற்பட்ட நிறுவனங்கள் சாக்கடைக்கு வெளியே வைத்திருந்த விளம்பர போர்டுகள், சாலை ஓரம் நீண்ட நாள் வைத்திருந்த பிளக்ஸ் பேனர்கள் பறிமுதல் செய்யப்பட்டு நகராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. சாலையோரம் விளம்பர போர்டுகள் வைத்தால் மீண்டும் பறிமுதல் செய்யபடும் என நகராட்சி அதிகாரிகள் தரப்பில் எச்சரிக்கை விடுக்கபட்டது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...