கோவை பூ மார்க்கெட்டுக்கு மல்லிகை பூ வரத்து குறைவு – ஒரு கிலோ ரூ.1200 விற்பனை

மல்லிகை பூ ஒரு கிலோ 1,200 ரூபாய்க்கும், ஜாதி மல்லி கிலோ ஆயிரம் ரூபாய்க்கும், முல்லை கிலோ 600 ரூபாய்க்குக்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாத இறுதிக்குள் மல்லி விலை குறைய வாய்ப்புள்ளது என்று மலர் வியபாரிகள் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை பூ மார்க்கெட்டுக்கு ஊட்டி, கோபி, சத்தியமங்கலம், மேட்டுப்பாளையம், திண்டுக்கல் மற்றும் நிலக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் உதிரிப்பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

பனிக்காலத்தில் மல்லி, ஜாதிமல்லி மற்றும் முல்லை பூக்கள் மலர்ச்சி குறைந்து விலை அதிகரிப்பு வழக்கம். இதனால் கடந்த இரண்டு மாதங்களாக விலை அதிகரித்து மல்லி கிலோ 2000 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. இப்போது பனி குறைந்து வெயில் அதிகரித்துள்ளது.

ஆனாலும், இரவு நேரங்களில் பனிப்பொழிவு குறையவில்லை. அதனால் மல்லிகை உற்பத்தி குறைந்து விலை அதிகரித்துள்ளது. நேற்று மல்லிகை ஒரு கிலோ 1200 ரூபாய்க்கும், ஜாதி மல்லி கிலோ ஆயிரம் ரூபாய்க்கு, முல்லை கிலோ 600, ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கோவை மலர் வியபாரிகள் கூறுகையில், மல்லி, ஜாதி, முல்லை இந்த மூன்றும் வெயில் காலத்தில் தான் அதிகம் வளர்ச்சி இருக்கும் பனிக்காலத்தில் மலர்ச்சி அதிகம் இருக்காது வழக்கமாக ஜனவரி பிப்ரவரியில் பணி குறைந்து உற்பத்தி அதிகரிக்கும்.

ஆனால், இந்த முறை பணி குறையவில்லை. இரவு நேரத்தில் பணி அதிகமாக உள்ளது. அதனால் மல்லி வரத்து குறைந்து குறைந்தது விலை அதிகரித்துள்ளது. இந்த மாத இறுதிக்குள் மல்லி விலை குறைய வாய்ப்புள்ளது என்றார்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...