மூலப் பொருட்களின் விலை ஏற்றம் - திருப்பூரில் ஹாலோ பிளாக் உற்பத்தியாளர்கள் உற்பத்தி நிறுத்த போராட்டம்

மூலப் பொருட்களின் விலையை குறைக்க கிரஷர் உரிமையாளர்கள் மற்றும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் மாவட்டம் முழுவதும் ஹாலோ பிளாக் உற்பத்தியாளர்கள் உற்பத்தி நிறுத்தம் மற்றும் விற்பனை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் மூலப் பொருட்களின் விலை ஏற்றம் காரணமாக ஹாலோ பிளாக் உற்பத்தி தொழில் பாதிப்பு அடையும் என்பதால் ஹாலோ பிளாக் உற்பத்தியாளர்கள் உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் இறங்கியுள்ளனர். கடந்த மாதம் கிரஷர் உற்பத்தியாளர்கள் ஜல்லி, எம்சாண்ட், பி-சாண்ட் போன்ற பொருட்களின் விலையை யூனிட் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் அதிகப்படுத்தியதால் ஹாலோ பிளாக் உற்பத்தியாளர்கள் மூலப் பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மூலப் பொருட்களின் திடீர் விலை ஏற்றத்தால் ஹாலோ பிளாக் கற்களின் விலையை ஆறு ரூபாய் வரை அதிகரித்து விற்பனை செய்து வருகின்றனர். கடும் விலையேற்றத்தால் பொதுமக்களும், கட்டுமான துறையினரும் ஹாலோ பிளாக் கற்களை வாங்க தயக்கம் காட்டுவதால் திருப்பூர் மாவட்டம் முழுவதும் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான ஹாலோ பிளாக் கற்கள் விற்பனையாகாமல் தேக்கமடைந்துள்ளன.

இந்நிலையில் மூலப் பொருட்களின் விலையை குறைக்க கிரஷர் உரிமையாளர்கள் மற்றும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் மாவட்டம் முழுவதும் ஹாலோ பிளாக் உற்பத்தியாளர்கள் உற்பத்தி நிறுத்தம் மற்றும் விற்பனைகளை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

செங்கல் விலை உயர்வு என்பதால் அதற்கு மாற்றாக ஹாலோ பிளாக் வாங்கி பயன்படுத்தி வீடு கட்டுவதை வாடிக்கையாக கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஹாலோ பிளாக் உற்பத்தியாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் நாள் ஒன்றுக்கு ஐந்து கோடி ரூபாய் வரை உற்பத்தி பாதிப்பு ஏற்படும் எனவும், அரசுக்கு நாழரை கோடி ரூபாய் வரை வரி இழப்பு ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் சுமார் 25,000 மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்படுவர் என கூறப்படுகிறது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...