தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்கள் வென்று பொள்ளாச்சி திரும்பிய மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

தனித்திறமை, சண்டை உள்ளிட்ட பிரிவுகளில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் பொள்ளாச்சியில் இருந்து சென்ற ஒன்பதாம் வகுப்பு மாணவி மேதினி, மூன்றாம் வகுப்பு மாணவன் ஆதோவ் ஆகிய இருவர் தங்கப் பதக்கமும், மூன்றாம் வகுப்பு மாணவன் நித்தின் வெள்ளி பதக்கமும் வென்றனர்.


கோவை: ஹரியானா மாநிலத்தில் கடந்த ஜனவரி 31, பிப்ரவரி 1 மற்றும் 2ம் தேதிகளில் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் சிலம்பம் போட்டியில் தமிழ்நாடு சார்பில் 300 பேர் பங்கேற்றனர். இதில் தனித்திறமை, சண்டை உள்ளிட்ட பிரிவுகளில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் பொள்ளாச்சியில் இருந்து சென்ற ஒன்பதாம் வகுப்பு மாணவி மேதினி, மூன்றாம் வகுப்பு மாணவன் ஆதோவ் ஆகிய இருவர் தங்கப் பதக்கமும், மூன்றாம் வகுப்பு மாணவன் நித்தின் வெள்ளி பதக்கமும் வென்றனர்.

பதக்கம் பெற்று இன்று பொள்ளாச்சி வந்த மாணவ, மாணவிகளுக்கு பெற்றோர்களும், உறவினர்களும் மாலை மற்றும் சால்வை அணிவித்து இனிப்புகள் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர். தற்காப்பு கலையான சிலம்பத்தை மாணவர்கள் ஆர்வத்துடன் பயிற்சி பெற்றதன் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வென்றுனர் என்றும், கேலோ விளையாட்டுப் போட்டியில் சிலம்பம் விளையாட்டு சேர்க்கப்பட்டிருப்பதால் அதிலும் பங்கேற்று, மாணவர்கள் பதக்கங்கள் வெல்வதற்கு லட்சியத்தோடு இருப்பதாக பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...