கோவை செல்வபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா கொண்டாட்டம்

முப்பெரும்விழாவையொட்டி பள்ளி மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி, கதை, கட்டுரை, நடனம், நாடகம், ஓவியம் உட்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. அதனைத்தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


கோவை: கோவை மாநகராட்சி 80வது வார்டுக்குட்பட்ட செல்வபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற நிறைவு விழா, விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா என முப்பெரும் விழா இன்று (பிப்.8) பள்ளி வளாகத்தில் கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் தனலட்சுமி தலைமை தாங்கினார். விழாவையொட்டி பள்ளி மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி, கதை, கட்டுரை, நடனம், நாடகம், ஓவியம் உட்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. அதனைத்தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.



நிகழ்ச்சியில் வார்டு கவுன்சிலரும், கோவை மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவருமான மாரிச்செல்வன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். இதில் 8ம் வகுப்பு மாணவி துர்கா ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றார். இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...