பொள்ளாச்சி அருகே ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

சர்கார்பதி வனப்பகுதியில் வெட்டி கொண்டு வரப்பட்ட 85 அடி உயரம் கொண்ட மூங்கில் மரத்தை பாலாற்றில் வைத்து பூஜை செய்து பக்தர்கள் படை சூட ஊர்வலாக கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு கோவிலின் ராஜ கோபுரம் முன்பு மேலதாளங்கள் முழங்க, பக்தர்களின் பரவச கோஷத்துடன் மூங்கில் மரம் கொடி ஏற்றி வைத்து குண்டம் திருவிழா தொடங்கியது.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் குண்டம் திருவிழா நடைபெறுவது வழக்கம்.



இந்தாண்டுக்கான குண்டம் திருவிழா வருகிற 25ம்தேதி நடைபெற இருகிறது. குண்டம் திருவிழாக்கான தொடக்க விழா இன்று நடைபெற்றது. சர்கார்பதி வனப்பகுதியில் வெட்டி கொண்டு வரப்பட்ட 85 அடி உயரம் கொண்ட மூங்கில் மரத்தை பாலாற்றில் வைத்து பூஜை செய்து பக்தர் படை சூட ஊர்வலாக கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு கோவிலின் ராஜ கோபுரம் முன்பு மேலதாளங்கள் முழங்க, பக்தர்களின் பரவச கோஷத்துடன் மூங்கில் மரம் கொடி ஏற்றி வைத்து குண்டம் திருவிழா தொடங்கியது.

இந்த நிகழ்வில் கோவை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், பக்தி பரவசத்துடன் வழிபட்டனர். குண்டம் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மயானபூஜை 23ம் தேதி நள்ளிரவிலும், 25ம் தேதி காலை குண்டம் இறக்கும் நிகழ்வும் நடைபெற இருக்கிறது.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...