நேதாஜி நகரில் கண்காணிப்பு கேமரா திறப்பு விழா- கோவை மாநகர காவல் துணை ஆணையர் பங்கேற்பு

கோவை மாநகரில் குற்ற நடவடிக்கை தடுப்பதற்கும், நடந்த குற்றங்களை கண்டுபிடிப்பதற்கும் குற்றமில்லா நகரமாக மாற்றுவதற்கும் 80 சதவீதம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல் துணை ஆணையர் சரவணகுமார் தெரிவித்தார்.


கோவை: நேதாஜி நகர் விரிவாக்கம் குடியிருப்போர் நல சங்கம் மற்றும் கோவை மாநகர காவல் டி1 காவல் நிலையம் சார்பில் கண்காணிப்பு கேமரா திறப்பு விழா நிகழ்வு நேற்று (பிப்.8) நடைபெற்றது. இதில் கோவை மாநகர காவல்துறை துணை ஆணையர் சரவணகுமார் கலந்து கொண்டு 32 கண்காணிப்பு கேமராவினை திறந்து வைத்தார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கோவை மாநகரில் குற்ற நடவடிக்கை தடுப்பதற்கும், நடந்த குற்றங்களை கண்டுபிடிப்பதற்கும் குற்றமில்லா நகரமாக மாற்றுவதற்கும் கோவை மாநகர காவல் துறை ஆணையாளர் உத்தரவின் பேரில் 80 சதவீதம் சிசிடிவி கேமராக்கள் அனைத்து பகுதிகளிலும் பொருத்தப்பட்டுள்ளது.



அதனை பொதுமக்களுக்கு பயன்பாட்டிற்காக கொண்டு சென்று அவர்களுக்கு உதவியாக காவல் துறையினர் செயல்பட்டு வருகின்றனர். இதில் பொதுமக்கள் மற்றும் தொழில்துறையினர் முயற்சியில் இப்பணிகள் நடைபெற்று உள்ளது. மேலும் இம்முயற்சியானது குற்றங்களை தடுப்பதற்கு முழு உதவியாக இருக்கும் என தெரிவித்தார்.

தொடர்ந்து நேதாஜி நகர் பகுதியில் மரக்கன்றுகளை துணை ஆணையர் சரவணகுமார் நட்டு வைத்தார். இந்நிகழ்வில் காவல்துறை போத்தனூர் சரக உதவி ஆணையர் கரிகால் பாரி சங்கர் மற்றும் நேதாஜி நகர் விரிவாக்கம் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் ஜாபர், ராமச்சந்திரன், சிதம்பரம், ஜெயச்சந்திரன், ஜெயக்குமார், சுதாகர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...