தை அமாவாசையை முன்னிட்டு திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோயிலில் மாட்டுவண்டிகளுடன் விவசாயிகள் வழிபாடு

முன்னோர்கள் கூறிய அறிவுரையின்படி தங்களது கால்நடைகள் நோய் நொடியின்றி நீண்ட நாட்கள் நலமுடன் இருக்க மாட்டுவண்டிகளுடன் வந்து தை அமாவசையை அன்று கோயிலில் தரிசனம் செய்வதாக விவசாயிகள் தெரிவித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் திருக்கோயிலில் தை அமாவசையை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் குவிந்தனர். மேலும் உடுமலை, பொள்ளாச்சி, தாராபுரம், கிணத்துக்கடவு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த சுமார் 500த்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் மாட்டுவண்டிகளில் வருகை புரிந்து சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.

முன்னோர்கள் கூறிய அறிவுரையின்படி தங்களது கால்நடைகள் நோய் நொடியின்றி நீண்ட நாட்கள் நலமுடன் இருக்க மாட்டுவண்டிகளுடன் தை அமாவசையை அன்று தரிசனம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும் எனவும், காங்கேயம் இனம் நாட்டு மாடுகள் வளர்ச்சி பெருகும் என பல ஆண்டுகளாக முன்னோர்கள் கூறிய அறிவுரையின் பேரில் பல ஆண்டுகளாக வருகிறோம் என்றும் இதனால் கால் நடைகள் நோய் நொடியின்றி நலமாக தொடர்ந்து இருப்பதாகவும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையில் தை அமாவாசை முன்னிட்டு உடுமலை திருமூர்த்தி மலை அமண லிங்கேஸ்வரர் திருக்கோவிலுக்கு உடுமலையிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...