அதிமுக, திமுகவில் இருந்து பலர் பாஜகவில் இணைய உள்ளனர் - கோவையில் முன்னாள் எம்.பி கே.பி. ராமலிங்கம் பேட்டி

அண்ணாமலையின் கரத்தை பலபடுத்துவதற்க்கும், அவரை சிறந்த தலைவராக உருவாக்குவதற்க்கும் தான் அதிமுகவிலிருந்து பாஜகவில் இணைந்திருக்கிறார்கள். அவர்களைக் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம் என்று முன்னாள் எம்.பி கே.பி. ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை விமானநிலையத்தில் முன்னாள் எம்.பி கே.பி. ராமலிங்கம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது, அண்ணாமலையின் கரத்தை பலபடுத்துவதற்க்கும், அவரை சிறந்த தலைவராக உருவாக்குவதற்க்கும் இவர்கள் எல்லாம் அதிமுகவிலிருந்து பாஜகவில் இணைந்திருக்கிறார்கள். இவர்களைக் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்.

அதேபோல் ஜே.பி.நாட்டா தமிழகம் வரும்போது இன்னும் அதிமுக, திமுகவிலிருந்து பல்வேறு தடைகளை தாண்டி கதவை உடைத்து கொண்டு பாஜகவில் இணைய இன்னும் சில பேர் இருக்கிறார்கள்.

அதனைத்தொடர்ந்து பேசிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சேலஞ்சர் துரை, இன்னும் அடுத்த பல ஆண்டுகள் பாஜக தான் ஆட்சியில் இருக்கும்.

தொழில்துறையான கோவைக்கு தேசிய நீரோட்டம் தான் பக்கபலமாக இருக்கும். அதை நினைத்து தான் நாங்கள் பாஜகவில் இணைந்திருக்கிறோம். ஊழல் பட்டியல் வெளியிடும் இளம் தளபதி, இளம் சிங்கம் அண்ணாமலை தலைமையில் நாங்கள் பயணித்து அவரின் கரத்தை வலுபடுத்துவோம். எங்களை வயதானவர்கள் என்று சொல்கிறார்கள். நத்தம் விஸ்வநாதன், பொன்னையன், எடப்பாடி, திண்டுக்கல் சீனிவாசன் எல்லாம் இளமையானவர்களா என கேள்வி எழுப்பினார். நாங்கள் என்ன டெல்லிக்கு அவர்களை போல தவிழ்ந்து போய் வந்தவர்களா என அவர் பேசினார்.

பின்னர், சிங்கநல்லூர் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினரும், அண்ணா தொழிற்சங்க தலைவருமான சின்னசாமி பேசியதாவது, அண்ணாமலையின் பணி எங்களை மெய்சிலிர்க்க வைக்கிறது. திமுக - அதிமுகவை ஒழிப்பதற்கு அண்ணாமலை தயாராக இருக்கிறார் என்று பேசினார்.

Newsletter

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...