கோவையில் பல்வேறு பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ஆய்வு

காந்திபுரம் புதிய மேம்பால கட்டுமான பணிக்காக இடிக்கபட்டு, ஶ்ரீ கண்ணனூர் மாரியம்மன் புதிய கோவில் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட மாற்று இடத்தை பொதுமக்களுடன் நேரில் சென்று சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பார்வையிட்டார்.


கோவை: கோவை, காந்திபுரம் புதிய மேம்பால கட்டுமான பணிக்காக இடிக்கபட்ட "அருள்மிகு ஶ்ரீ கண்ணனுர் மாரியம்மன் கோவிலுக்கு" மாற்று இடம் ஒதுக்க வேண்டுமென தமிழக சட்ட சபையில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கோரிக்கை வைத்திருந்தார். அதனை, தொடர்ந்து இன்று (பிப்.10) ஶ்ரீ கண்ணனூர் மாரியம்மன் புதிய கோவில் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட மாற்று இடத்தை பொதுமக்களுடன் நேரில் சென்று பார்வையிட்டார்.



பின்னர் கோவை தெற்கு தொகுதி 64-வது வார்டு மசால் லே அவுட் வீதியில் வாய்க்கால் தூர்வாரும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



பின்னர் அங்குள்ள பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.



இதைத்தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டபட்டு வரும் மருத்துவ கட்டிடத்தை நேரில் சென்று பார்வையிட்டார். பின் மருத்துவமனையின் புதிய வசதிகள் மற்றும் தேவைகளை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா அவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டார்.



மேலும் கோவை தெற்கு தொகுதி 69-வது வார்டு சாய்பாபா காலனியில் அமைந்துள்ள அண்ணா தினசரி மார்கெட்டில் புதிதாக வணிக வளாகத்தின் கட்டுமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...