31வது பெடரேசன் கூடைப்பந்து கோப்பை: இறுதி போட்டியில் பெண்கள் பிரிவில் சத்தீஸ்கர் அணியும் ஆண்கள் பிரிவில் ஓஎன்ஜிசி அணியும் வெற்றி.

31வது பெடரேசன் கோப்பைக்கான தேசிய சாம்பியன் கூடைப்பந்து இறுதி போட்டியில் ஆண்கள் பிரிவில் ஓஎன்ஜிசி அணியும் பெண்கள் பிரிவில் சத்தீஸ்கர் அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றின.

31வது தேசிய அளவிலான ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் பங்கேற்ற தேசிய சாம்பியன் கூடைப்பந்து போட்டிகள் கோவை பி.எஸ்.ஜி. உள்விளையாட்டு அரங்கில் கடந்த 22 – ம் தேதி முதல் நடைபெற்று வந்தது. இறுதி  போட்டியில் பெண்கள் பிரிவில் சத்தீஸ்கர் அணியும் ஆண்கள் பிரிவில் ஓஎன்ஜிசி அணியும் வெற்றி பெற்று கோப்பையை கைபபற்றினர். 



பெண்கள் இறுதி சுற்றுப் பிரிவில் சத்தீஸ்கர் அணியும் தென்னக இரயில்வே அணியை எதிர்த்து விளையாடிது. இதில் சத்தீஸ்கர் அணி 77 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றது. இதன் வீராங்கனைகள் பூனம் சதுர்வேதி 28 புள்ளிகளும், சரன்ஜித் கவுர் 27 புள்ளிகளும் எடுத்தனர்.எதிர்த்து விளையாடிய தென்னக இரயில்வே அணி 67 புள்ளிகள் பெற்றது. இதன் வீராங்கனைகள் பி.அனிதா 23 புள்ளிகளும், எஸ்.நீனா 17 புள்ளிகளும் பெற்றனர்.  


ஆண்கள் இறுதி சுற்று போட்டியில் ஓஎன்ஜிசி அணியை எதிர்த்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி விளையாடியது. இதில் ஓஎன்ஜிசி அணி 55 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றது. இதன் வீரர்கள் அம்ரித்பால் சிங் 17 புள்ளிகளும், விசேஷ் பிரிகுவான்சி 17 புள்ளிகளும் பெற்றனர். எதிர்த்து விளையாடிய இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி 52 புள்ளிகள் பெற்று 2ம் இடத்தை பிடித்தது.இதன் வீரர்கள் பிரசன்னா வெங்கடேஷ் 14 புள்ளிகளும்,பிரதம் சிங் 13 புள்ளிகளும் எடுத்தனர்.  


முன்னதாக இன்று காலை நடைபெற்ற மூன்று மற்றும் நான்காவது இடங்களுக்கான போட்டிகளில் பெண்கள் அணியில் மேற்கு வங்க அணியை எதிர்த்து தமிழ்நாடு அணி விளையாடியது. இதில் மேற்கு வங்க அணி 81 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றது. இதன் வீராங்களைகள் சல்மா தேவி 22 புள்ளிகளும் மது குமாரி 20 புள்ளிகளும் எடுத்தனர்.எதிர்த்து விளையாடிய தமிழ்நாடு அணி 52 புள்ளிகள் பெற்றது. இதன் வீராங்கனைகள் வர்ஷநந்தினி 13 புள்ளிகளும் ஸ்ரீவித்யா சேகர் 12 புள்ளிகளும் பெற்றனர். 


தொடர்ந்து நடைபெற்ற ஆண்கள் அணியில் இந்தியன் ஏர்போர்ஸ் அணியை எதிர்த்து ஆர்மி சர்வீசஸ் கார்ப்ஸ் அண்டு சென்டர் அணி விளையாடியது. இதில் இந்தியன் ஏர்போர்ஸ் அணி 85 புள்ளிகள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் வீரர்கள் ஜோகிந்தர் சிங் 33 புள்ளிகளும், நரேந்தர் 30 புள்ளிகளும் எடுத்தனர். எதிர்த்து விளையாடிய ஆர்மி சர்வீசஸ் கார்ப்ஸ் அண்டு சென்டர் அணி 79 புள்ளிகள் பெற்றனர்.இறுதிப் போட்டியை தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழா நிகழ்ச்சியில் வருமான வரி துறை ஆணையாளர் பி.செல்வகனேஷ், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற ஓஎன்ஜிசி அணி மற்றும் சத்தீஸ்கர் அணிக்கு வெற்றி கோப்பையை பரிசாக வழங்கினார். 



மேலும் விழாவில்  அரைஸ் பவுண்டேசன், நிறுவனர் மற்றும் 31வது பெடரேசன் கோப்பை தேசிய கூடைப்பந்து சேம்பியன்சிப் போட்டி ஏற்பாட்டு தலைவருமான ஆதவ் அர்ஜுன், இந்திய கூடைப்பந்து கழக பொது செயலாளர் சந்தர் முகி சர்மா, தமிழ்நாடு கூடைப்பந்து கழக தலைவரும் 31வது பெடரேசன் கோப்பை தேசிய கூடைப்பந்து சேம்பியன்சிப் போட்டி ஏற்பாட்டு தலைவருமான  ராஜ் சத்யன், மற்றும் தமிழ்நாடு கூடைப்பந்து கழக முதுநிலை துணைத் தலைவர் செந்தில் தியாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இறுதி போட்டிகளில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்த ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கு பரிசாக ரூ. 1 லட்சம் மற்றும் கோப்பையும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு பரிசாக ரூ.75 ஆயிரம், மூன்றாமிடம் பிடிக்கும் அணிக்கு பரிசாக ரூ.50 ஆயிரம் மற்றும் நான்காமிடம் பிடிக்கும் அணிக்கு பரிசாக ரூ.25 ஆயிரம் வழங்கபட்டது.

Newsletter

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...

அவிநாசி தனித்தொகுதி தவெக MLA கமலி அமைச்சராக பதவியேற்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனித்தொகுதி தமிழக வெற்றிக் கழக MLA கமலி, தவெக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில்...

கோவை மாவட்டத்தை சேர்ந்த 2 தவெக MLA-க்களுக்கு அமைச்சரவை பதவி..!

கோவை வடக்கு மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளை சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத்குமார், விக்னேஷ் குமார் ஆகியோருக்க...

கோவையில் இன்று (21.05.2026) மாதாந்திர மின் பராமரிப்பு:  பல பகுதிகளில் மின் நிறுத்தம்

கோவை நகரில் மே 21, 2026 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஐந்து துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும...