ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட அரசு ஆணை - நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அறிவிப்பு

ஆழியாறு புதிய பாசனம் 'ஆ' மண்டல பாசனத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு உயிர் தண்ணீர் தேவைக்காக (பிப்.12 - மார்ச்.23) வரை 40 நாட்களில் தகுந்த இடைவெளி விட்டு 19 நாட்கள் தண்ணீர் திறப்பு என்ற அடிப்படையில் மொத்தம் 610 மில்லியன் கன அடிக்கு மிகாமல் ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.


கோவை: நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா நேற்று (பிப்.10) வெளியிட்டுள்ள அறிக்கையில், கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை வட்டம், பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில், ஆழியாறு புதிய பாசனம் 'ஆ' மண்டல பாசனத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு உயிர் தண்ணீர் தேவைக்காக (பிப்.12 - மார்ச்.23) வரை 40 நாட்களில் தகுந்த இடைவெளி விட்டு 19 நாட்கள் தண்ணீர் திறப்பு என்ற அடிப்படையில் மொத்தம் 610 மில்லியன் கன அடிக்கு மிகாமல் ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.

இதனால் கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை வட்டங்களில் உள்ள 22332 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல், நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா நேற்று (பிப்.10) வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில், திருப்பூர் மாவட்டம், பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில், திருமூர்த்தி அணையில் இருந்து பாலாறு படுகை முதலாம் மண்டல பாசன பகுதிகளுக்கு உட்பட்ட பாசன நிலங்களுக்கு 2½ சுற்றுகள் (12.2.2024) முதல் (22.5.2024) வரை 100 நாட்களுக்குள் உரிய இடைவெளி விட்டு 5000 மில்லியன் கன அடிக்கு மீகாமல் நீர் இழப்பு உட்பட தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.

இதனால் கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 94521 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...